Connect with us

மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.

parthiban kamalhaasan

Latest News

மணிரத்தினத்துக்கே இப்ப கமல் பத்தல!.. ஆனா நான் திறமையை நம்பி நிக்கிறேன்!.. வெளிப்படையாக பேசிய பார்த்திபன்!.

cinepettai.com cinepettai.com

1989 இல் புதிய பாதை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் பார்த்திபன். பார்த்திபனை பொறுத்தவரை அவருக்கு கதாநாயகன் ஆக வேண்டும் என்றுதான் ஆசை இருந்தது.

ஆனால் அப்போது பெரும்பாலான நடிகர்கள் முதலில் பாக்கியராஜின் உக்தியைதான் பயன்படுத்தினர். முதலில் இயக்குனராகிவிட்டு பிறகு கதாநாயகனாவது. அந்த வகையில் பார்த்திபனும் கதாநாயகன் ஆனார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதைகளை முயற்சித்து வரும் பிரபலங்களில் கமல்ஹாசனுக்கு பிறகு முக்கியமானவர் பாக்கியராஜ். நிறைய புது வித திரைப்படங்களை இவர் தமிழில் இயக்கி இருக்கிறார்.

Parthiban
Parthiban

தமிழில் ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தை இயக்கினார் பார்த்திபன். அந்த திரைப்படத்தில் நடித்திருந்த ஒரே கதை மாந்தர் பார்த்திபன் மட்டுமே. வேறு யாருமே அந்த படத்தில் வர மாட்டார்கள். இருந்தும் கூட அந்த படம் சுவாரஸ்யமாக செல்லும்.

அதே போல இரவின் நிழல் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தமிழில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாக இரவின் நிழல் இருந்தது. இந்த நிலையில் அவர் தற்சமயம் பேட்டியில் கூறும்போது பெரும் நடிகர்களின் மார்க்கெட் அதிகரித்து வருகிறது.

ரஜினி மாதிரியான ஒரு நடிகரை வைத்து இயக்கப்படும் படங்களில் கூட ரஜினி மட்டுமே ரசிகர்களுக்கு போதுமானதாக இல்லை. ஒரு விஜய் சேதுபதியை கூட சேர்க்கின்றனர். கமல் மணிரத்தினம் சேரும் ஒரு படத்தில் கூட ஃபகத் ஃபாசிலை நடிக்க வைக்கின்றனர்.

இப்படி எல்லாம் பெரிதாக போய் கொண்டிருக்கும் சினிமாவில் 13 திறமையை மட்டும் நம்பி நான் இயக்கியிருக்கும் படம்தான் டீன்ஸ் இந்த திரைப்படம் மட்டும் வெற்றி பெற்றால் பிறகு அந்த பெரும் நடிகர்களை வைத்து நான் திரைப்படம் இயக்கும் நிலைக்கு வந்துவிடுவேன் என கூறுகிறார் பார்த்திபன்.

POPULAR POSTS

ilayaraja
rajini lokesh kanagaraj
sundar c kushboo
deva
vijay rajinikanth
pugazh vengatesh bhatt
To Top