Connect with us

நீ இயக்குனர் கிடையாது!. உண்மையான இயக்குனரை வர சொல்லு!.. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் நடிகை செய்த பிரச்சனை!.

sivaji banumathi

Cinema History

நீ இயக்குனர் கிடையாது!. உண்மையான இயக்குனரை வர சொல்லு!.. சிவாஜி கணேசன் திரைப்படத்தில் நடிகை செய்த பிரச்சனை!.

cinepettai.com cinepettai.com

திரைப்படம் இயக்குவதில் எல்லா காலக்கட்டத்திலும் ஒரு பஞ்சாயத்து இருந்துக்கொண்டுதான் சிலர் பேருக்கு இயக்குனர் என தங்களது பெயரை போட்டுக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் படத்தை இயக்கியது வேறு நபராக இருக்கும்.

இந்த சம்பவமானது சினிமா வரலாறு முழுவதும்  நடந்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு தலை ராகம் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் இ.எம் இப்ராஹிம் ஆகும். ஆனால் உண்மையில் இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் டி.ராஜேந்தர்தான். இந்த மாதிரியான சம்பவம் ஒன்று 1957 இல் நடந்துள்ளது.

sivaji-ganesan
sivaji-ganesan

சிவாஜி மற்றும் பானுமதி நடிப்பில் அப்போது வெளியான திரைப்படம்தான் மக்களை பெற்ற மகராசி. இந்த திரைப்படத்தை கே.சோமு என்கிற இயக்குனர் இயக்கினார். இந்த திரைப்படத்தின் வசனம் மற்றும் திரைக்கதையை ஏ.பி நாகராஜன் எழுதியிருந்தார்.

ஏ.பி நாகராஜன் அப்போது பிரபலமான இயக்குனர் ஆவார். திருவிளையாடல் புராணம், தில்லானா மோகனாம்பாள் போன்ற திரைப்படங்கள் எல்லாம் இவர் இயக்கிய திரைப்படங்களே. இந்த நிலையில் மக்களை பெற்ற மகராசி திரைப்படத்தையும் அவர்தான் இயக்கினார்.

கே.சோமு பேச்சுக்குதான் அந்த திரைப்படத்தில் இயக்குனராக இருந்தார். இந்த நிலையில் ஒரு நாள் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போது மோக மூட்டமாக இருந்ததால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். வெயில் வரும் வரை காத்திருந்தனர்.

இந்த நேரத்தில் ஏதாவது சாப்பிட்டு வரலாம் என வெளியில் சென்றுவிட்டார் ஏ.பி நாகராஜன். அந்த சமயம் பார்த்து திரும்பவும் வெயில் வரவே நடிகை பானுமதியிடம் சென்று வெயில் வந்துவிட்டது நடிக்க வாருங்கள் என அழைத்துள்ளார் கே.சோமு. ஆனால் நிஜ இயக்குனரை வர சொல்லுங்கள் பிறகுதான் நடிக்க வருவேன் என கூறியிருக்கிறார் பானுமதி.

ஏ.பி நாகராஜன் இந்த படத்தை இயக்கி இருந்தாலும் படம் வெளியானப்போது இயக்குனர் என கே.சோமுவின் பெயர்தான் போடப்பட்டது/.

To Top