பார்க்க எப்படி இருக்கோம்ங்கிறது முக்கிய இல்ல..! உருவக்கேலி செய்த தொகுப்பாளருக்கு அட்லீ கொடுத்த பதில்..!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அதற்கு பிறகு இவருக்கு ராஜா ராணி திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

ராஜா ராணி திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து அட்லீக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு விஜய் மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்க வாய்ப்புகள் கிடைத்தன.

விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி திரைப்படம் அல்டிமேட் ஹிட் கொடுத்தது. அதே மாதிரி பிறகு விஜய்யுடன் அவர் இயக்கிய பிகில், மெர்சல் ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில அடுத்ததாக பாலிவுட் சென்றார் அட்லீ.

atlee
atlee
Social Media Bar

அட்லீ கொடுத்த பதில்:

அங்கு அவர் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றி கொடுத்தது. கிட்டத்தட்ட 1000 கோடிக்கும் அதிகமாக வெற்றியை கொடுத்தது. அதனை தொடர்ந்து தற்சமயம் பாலிவுட்டில் பிரபலமான இயக்குனராக மாறியுள்ளார் அட்லீ.

இந்நிலையில் சமீபத்தில் அட்லீ ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார். அந்த பேட்டியில் அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர் அவரை உருவ கேலி செய்யும் விதமாக கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அட்லீ நாம பார்க்க எப்படி இருக்கோம்ங்கிறது முக்கியம் இல்ல. நம்மளால என்ன பண்ண முடியும் அதுதான் முக்கியம் என கூறியுள்ளார்.