தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முந்தைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் வளர வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயமாக இருந்தது.
ஐந்து படங்களுக்கு மேல் நடித்தால்தான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு ஒரு திரைப்படத்தின் மூலமே அதிக பிரபலம் ஆகி விடுகின்றனர் நிறைய நடிகர்கள்.
அப்படியாக மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அதிகமாக பிரபலமானவர்தான் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி என்கிற திரைப்படத்தின் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அதற்கு பிறகு இவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. நான்கு கோடிக்கு எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 50 கோடியை தாண்டி வசூல் கொடுத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து இப்பொழுது நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிலையில் கவின், மணிகண்டன் மாதிரியான வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இப்பொழுது பிரதீப் ரங்கநாதனும் இருந்து வருகிறார்.
ஆனால் சம்பள விஷயத்தைப் பொறுத்தவரை கவின் மற்றும் மணிகண்டனை விட அதிகமான சம்பளத்தை வாங்குகிறார் பிரதீப் ரங்கநாதன் தற்சமயம் பிரதீப் ரங்கநாதன் ஒரு திரைப்படத்திற்கு 14 கோடி சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகிறது.
இவருக்கு முன்பிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் கவின் மணிகண்டன் கூட இன்னும் 10 கோடி சம்பளத்தை தொடாத நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஒரே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து 14 கோடி சம்பளத்திற்கு உயர்ந்திருப்பது திரைத்துறையிலேயே பலருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.







