நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலங்களாக தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கின்றன. முன்பு சிவகார்த்திகேயனை மக்கள் எல்லாம் ஒரு காமெடி நடிகராக மட்டுமே பார்த்தனர்.
இதனால் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களையும் அதற்கு தகுந்தாற் போல தேர்ந்தெடுத்தார் எஸ்.கே. இருந்தாலும் காமெடிக்கு நடுவில் எமோஷனல் ஆக்ஷன் என கொஞ்சமாக தன்னை ஆக்ஷன் ஹீரோவாக பழக்கி வைத்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் முழுக்க முழுக்க சீரியஸ் திரைப்படமாக இருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அவர் சீரியஸாக அதுவும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில் எஸ்.கே அடுத்து நடித்து வரும் திரைப்படம் சேயோன். இந்த திரைப்படத்தில் எஸ்.கே முழு சீரியஸ் கதாபாத்திரமாக களம் இறங்கியிருக்கிறார் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது.மக்கள் தன்னை கமர்ஷியல் கதாநாயகனாக ஏற்று கொண்டதால் இனி எஸ்.கே கொஞ்சம் தைரியமாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார் என தெரிகிறது.








