இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்து உருவான திரைப்படம் இரவாகாலம். இந்த படம் ஒரு ரொமாண்டிக் த்ரில்ல படமாக உருவாக்கப்பட்டது. ஆனால் 2017இல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் இப்போது வரை திரைக்கு வரவே இல்லை
படத்தின் கதைப்படி எஸ்.ஜே சூர்யா காதலித்து வந்த பெண் ஒரு நாள் இறந்து போகிறார். அவரது இறப்புக்கு பிறகு பல வருடங்களாக நிம்மதி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார் எஸ்.ஜே சூர்யா. இந்த நிலையில் தனது காதலியை சிலர் திட்டமிட்டு கொலை செய்தது இவருக்கு தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து அவர்களை எஸ்.ஜே சூர்யா பழிவாங்குவதை கதையாக கொண்டு இந்த படத்தின் கதை செல்லும். இந்த திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. ஆனால் அந்த சமயத்தில் பயங்கர பொருளாதார நெருக்கடியில் இருந்தது தேணாண்டாள் பிலிம்ஸ்.
எனவே அது தனது நிறுவனத்தை மூடியது. இதனால் அப்போது அந்த நிறுவன தயாரிப்பில் உருவான படங்களும் வெளியாக முடியாமல் போனது. அப்படியாக இரவாகாலம் படமும் வெளியாக முடியாமல் போனது. ஆனால் எப்படியாவது அந்த படத்தை வெளி கொண்டு வர வேண்டும் என முயற்சித்து வருகிறார் படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன்







