Connect with us

நீங்க இல்லாம கூட என்னால படம் பண்ண முடியும் பெருசு – கண்ணதாசனுக்கு சவால் விட்டு ஸ்ரீதர் செய்த காரியம்.

Cinema History

நீங்க இல்லாம கூட என்னால படம் பண்ண முடியும் பெருசு – கண்ணதாசனுக்கு சவால் விட்டு ஸ்ரீதர் செய்த காரியம்.

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஸ்ரீதர் பிரபலமானவர். அவர் இயக்கிய பல படங்கள் இப்போது வரை மக்களுக்கு பிடித்த படங்களாக இருந்துள்ளன. அதே போல ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி விட்டவரும் ஸ்ரீதர்தான். இவர் தமிழ் சினிமாவில் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

எப்போதும் ஸ்ரீதர் படங்களுக்கு எம்.எஸ்.விதான் இசையமைப்பார். கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதுவார். இது ஒரு காம்போவாக சென்றுக்கொண்டிருந்தது. இந்த நிலையில் ஒரு நாள் மூவரும் திரைப்படங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

ஸ்ரீதர் சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்படுபவர். புது முக நடிகர்களை வைத்து காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தை இயக்க இருப்பதாக அப்போது கண்ணதாசனிடம் கூறியுள்ளார் ஸ்ரீதர். புது முகங்களை வைத்து படம் எடுப்பது ரிஸ்க் தம்பி பார்த்துக்கோ. என கூறியுள்ளார் கண்ணதாசன்.

உடனே கோபமான ஸ்ரீதர் ஏன் என்னால முடியாதுன்னு நினைக்கிறீங்களா? யார் துணையும் இல்லாம என்னால் ஒரு ஹிட் படம் கொடுக்க முடியும் என் கூறியுள்ளார்.

அப்போ நானும் எம்.எஸ்.வியும் கூட உனக்கு தேவையில்லையா? என கண்ணதாசன் விளையாட்டாக கேட்க, ஆமாம் உங்க உதவி இல்லாமலே ஒரு படம் பண்றேன் என கோபமாக சென்றுள்ளார் ஸ்ரீதர். அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் கண்ணதாசனின் பங்கு என்னவென்று ஸ்ரீதருக்கு புரிந்துள்ளது.

எனவே தனது உதவியாளர் சித்ராலயா கோபுவை அழைத்து கண்ணதாசனிடம் பாடல் வரிகளை எழுதி வாங்கி வர சொன்னார். கோபு படத்தின் திரைக்கதையில் வேலை பார்த்திருப்பதால் அவரே கண்ணதாசனிடம் பாடல் வரிகளை எழுதி வாங்கி வந்தார். அதன் பிறகு அந்த பாடல்களை கேட்ட ஸ்ரீதர் உண்மையிலேயே நீங்க இல்லாமல் என்னால் ஹிட் கொடுக்க முடியாது என கூறி கண்ணதாசனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

POPULAR POSTS

gabriella
samantha
sundar c prasanth
jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
To Top