Connect with us

நான் நடிச்சிட்டு இருக்கேன்! – நீ சிரிக்கிற! – அருள்நிதிக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கும் நடந்த பஞ்சாயத்து!

Cinema History

நான் நடிச்சிட்டு இருக்கேன்! – நீ சிரிக்கிற! – அருள்நிதிக்கும் எம்.எஸ் பாஸ்கருக்கும் நடந்த பஞ்சாயத்து!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.எஸ் பாஸ்கர். ஒரு காட்சிக்கு அவர் வந்தாலும் கூட அந்த காட்சியில் சிறப்பான தனது நடிப்பை காட்டி தனியாக ஒரு இடத்தை பிடித்துவிடுவார்.

இதனாலேயே பெரிதாக நடிப்பு வராத நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் எம்.எஸ் பாஸ்கரை நடிக்க விட மாட்டார்கள். டிமாண்டி காலணி படத்தில் ஜோசியம் கூறும் ஜோசியராக நடித்திருந்தார் எம்.எஸ் பாஸ்கர்.

அந்த படம் வெளியான பிறகு படத்தில் அந்த காமெடி காட்சி மிகவும் ட்ரெண்ட் ஆனது. அந்த காட்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது எம்.எஸ் பாஸ்கரை நடிப்பை கண்டு கதாநாயகன் அருள்நிதிக்கே சிரிப்பு வந்துவிட்டது.

முதல் டேக்கிலையே முடிய வேண்டிய காட்சி அருள்நிதி சிரித்ததால் மீண்டும் படமாக்கப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் “ஏண்டா எவ்ளோ கஷ்டப்பட்டு நடிச்சிட்டு இருக்கேன்” நீ சிரிச்சுட்டு இருக்க என அருள்நிதியிடம் வந்து கேட்டார் எம்.எஸ் பாஸ்கர்.

சார் உங்க நடிப்பு அவ்வளவு அபாரமா இருந்தது சார். அதுனால என்னால சிரிப்பை அடக்க முடியல. சாரி சார் என கூறியுள்ளார் அருள்நிதி. இதையடுத்து சமாதனமாகியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர். அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை தரக்கூடியவர் எம்.எஸ் பாஸ்கர் என ஒரு பேட்டியில் அருள்நிதி கூறியுள்ளார்.

To Top