Connect with us

அந்த படத்துக்காக 55 நாள் குளிக்காம நடிச்சேன்!- அதிர்ச்சியை கிளப்பிய பால சரவணன்!

Cinema History

அந்த படத்துக்காக 55 நாள் குளிக்காம நடிச்சேன்!- அதிர்ச்சியை கிளப்பிய பால சரவணன்!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் பால சரவணன். இவர் என் பெயர் மீனாட்சி என்கிற சீரியலில் முதன் முதலாக தோன்றினார். அதன் பிறகு தமிழ் சினிமாவிற்கு வந்தவர் இதுவரை 40க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

போன வருடம் வெளியான விலங்கு வெப் சீரிஸில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பால சரவணன். பலரும் அந்த சீரிஸிற்காக அவரை பாராட்டினர். 2014 ஆம் ஆண்டு இவர் விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்தார்.

அந்த திரைப்படத்தில் பீடை என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். அந்த கதாபாத்திரம் சற்று அலுக்கான கதாபாத்திரம். படத்தை துவங்கும்போதே இயக்குனர் அந்த கதாபாத்திரம் குறித்து பால சரவணனிடம் கூறிவிட்டார். மேலும் இதற்காக பட தரப்பில் இருந்து மேக்கப் மேன் என யாரையும் அனுப்பவில்லை.

இதனால் பால சரவணனே அந்த கதாபாத்திரத்திற்கான மேக்கப்பை செய்துக்கொள்ள வேண்டி இருந்தது. படத்தின் படப்பிடிப்பு 55 நாட்கள் நடந்தன. அந்த 55 நாட்களும் பால சரவணன் தலைக்கு குளிக்காமல் தலையை சடை சடையாக வைத்துள்ளார். அப்படி இருப்பதுதான் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றதாக இருக்கும் என அவ்வாறு செய்துள்ளார் பால சரவணன்.

இதை ஒரு பேட்டியில் கூறும்போது அவர் கூறியுள்ளார்.

POPULAR POSTS

gabriella
samantha
sundar c prasanth
jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
To Top