Connect with us

இவங்க ரெண்டு பேரும் பெரிய ஆள் ஆனதே இளையராஜாவால்தான்! – பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

Cinema History

இவங்க ரெண்டு பேரும் பெரிய ஆள் ஆனதே இளையராஜாவால்தான்! – பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

cinepettai.com cinepettai.com

எந்த ஒரு துறையில் பெரும் உச்சத்தை அடைந்தவர்களில் சிலர் அடக்கமாக இருப்பார்கள். ஆனால் பலர் பெரும்பாலும் ஏதாவது தவறுகளை செய்துவிடுவதுண்டு. இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அப்படியாக சில விஷயங்களை செய்துள்ளார். ஆனால் அது நன்மையில்தான் முடிந்தது எனலாம்.

1990 காலக்கட்டங்களில் பெரும் இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர். அந்த சமயத்தில் பாலச்சந்தர் இயக்கிய பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டன. அவரின் திரைப்படங்களுக்கு அப்போது இளையராஜாதான் இசையமைத்து வந்தார்.

ஒரு முறை பாடலுக்கு இசையமைப்பது குறித்து இளையராஜாவிடம் பேசுவதற்காக பாலச்சந்தர் அவரின் உதவி இயக்குனரை அனுப்பினார். அந்த உதவி இயக்குனர் அனுமதி வாங்காமல் ஸ்டுடியோவிற்குள் சென்றதால் அவரை அவமானப்படுத்தினார் இளையராஜா. இதனால் கோபமான பாலச்சந்தர் அவருக்கு பதிலாக அழகன் என்ற அந்த படத்தில் கீரவாணியை இசையமைக்க அழைத்தார்.

தெலுங்கு சினிமாவில் தமிழுக்கு வந்த கீரவாணி  வந்தவுடனேயே தமிழில் ஹிட் அடித்தார். தற்சமயம் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இசையமைத்ததற்காக இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.

இதே போல அப்போது மணிரத்னம் திரைப்படங்களுக்கும் கூட இளையராஜாதான் இசையமைத்து வந்தார். ரோஜா படத்திற்கு இளையராஜா போட்ட இசை மணிரத்னத்திற்கு பிடிக்காமல் போகவே அதுக்குறித்து இளையராஜாவிடம் பேசினார். அதனால் கடுப்பான இளையராஜா “என் இசையையே குறை கூறுகிறாயா?” என மணிரத்னத்தை திட்டி அனுப்பிவிட்டார்.

இதனால் கோபமான மணிரத்னம் ரோஜா திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார்.வந்த முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார் ஏ.ஆர் ரகுமான். ஏ.ஆர் ரகுமானும் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளார்.

இப்படியாக இரண்டு ஆஸ்கர் நாயகர்கள் உருவாக மறைமுகமாக காரணமாக இருந்துள்ளார் இளையராஜா.

To Top