Connect with us

ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

Cinema History

ரஜினி மாதிரியே நானும் எளிமையா இருக்க போறேன்!- காபி அடிச்சி நோவு வாங்கிய கன்னட நடிகர்!

cinepettai.com cinepettai.com

தமிழ் திரைத்துறையில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே முக்கால்வாசி அந்த படம் மாஸ் ஹிட் கொடுப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தமிழ் சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் தான்.

கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ரஜினிகாந்தை நேரில் பார்ப்பவர்கள் அதை நம்ப முடியாது. அந்த அளவிற்கு மிகவும் எளிமையாக இருப்பவர் ரஜினிகாந்த். இதுவரை தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் ரஜினிகாந்தின் எளிமை தன்மையை புகழ்ந்து பேசி உள்ளனர்.

அதேபோல கன்னட நடிகர் ஒருவரும் ரஜினிகாந்தின் எளிமை தன்மையை பார்த்து வியந்துள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரான சிவராஜ்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஒரு காட்சி அதிக வெப்பம் கொண்ட ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது. இதனால் நடிக்க வந்த அனைவருக்கும் கேரவன் கொடுக்கப்பட்டது.

சிவராஜ்குமாருக்கு அதிக வெப்பம் உடலுக்கு ஆகாது என்பதால் அடிக்கடி அவர் தனது கேரவனுக்கு சென்று வந்தார். ஆனால் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் கேரவனுக்கு வெளியிலேயே ஒரு குடையை போட்டு அதற்கு கீழே அமர்ந்திருந்தார். ரஜினிகாந்த் வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது நாம் அடிக்கடி கேரவனுக்கு சென்று வருவது அவ்வளவு நன்றாக இருக்காது என்று யோசித்த சிவராஜ்குமார் பிறகு கேரவனுக்கு செல்லாமல் ரஜினியிடமே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் சிவராஜ்குமார் அடிக்கடி தண்ணீரை குடித்துக் கொண்டே இருந்துள்ளார். இதை பார்த்த ரஜினி ஏன் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறீர்கள் உடலுக்கு ஏதும் பிரச்சனையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சிவராஜ்குமார் ”எனக்கு வெப்பம் அவ்வளவாக ஒத்துக் கொள்ளாது. ஆனால் நீங்கள் வெளியில் அமர்ந்திருக்கும் பொழுது நான் மட்டும் எப்படி கேரவனுக்கு சென்று ஓய்வு எடுக்க முடியும்” என சிவ ராஜ்குமார் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு கோபமடைந்த ரஜினிகாந்த் உங்களுக்கு என்ன வசதியோ அப்படியாக இருந்து கொள்ள வேண்டியதுதானே, எனக்கு வெளியில் அமர்ந்திருப்பது தான் பிடிக்கும் என்பதால் நான் வெளியில் அமர்ந்துள்ளேன் என கூறியுள்ளார் அதன் பிறகு சிவராஜ்குமாரின் படப்பிடிப்புகள் எடுத்து முடிக்கும் வரையில் அவருக்காக ரஜினிகாந்த் கேரவனுக்கு உள்ளே அமர்ந்திருந்தார்.

ரஜினியின் எளிமை தன்மையையும் ,புரிந்து கொள்ளும் பக்குவத்தையும் பார்த்த சிவராஜ்குமார் பல நண்பர்களிடம் இது குறித்து பேசி உள்ளார்.

POPULAR POSTS

jayalalitha sridhar
pradeep ranganathan
sundar c
godzilla-minus-one
ilayaraja seenu ramasamy
viduthalai
To Top