Connect with us

வங்கி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த படம்!.. ஹீரோ நம்ம விக்ரமாம்.. என்னப்பா சொல்றீங்க!..

Cinema History

வங்கி ஊழியர்கள் எல்லாம் சேர்ந்து எடுத்த படம்!.. ஹீரோ நம்ம விக்ரமாம்.. என்னப்பா சொல்றீங்க!..

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இதனால் எப்போதுமே விக்ரம் நடிக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அதற்கு முக்கிய காரணமாக அமைந்த திரைப்படம் சேது. சேது திரைப்படம் வெளியானபோது அது சோகமாக க்ளைமேக்ஸாக முடிந்திருந்தாலும் கூட மன நலம் பாதிக்கப்பட்டவராக விக்ரம் நடித்திருந்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் இந்த திரைப்படத்தில் விக்ரம் நடித்ததற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.

இந்த படத்திற்கு முன்னால் விக்ரம் விளம்பரங்களில்தான் நடித்து வந்தார். அந்த சமயத்தில் செல்வராஜ் என்னும் வங்கி ஊழியர் திரைப்படம் தயாரிப்பதில் ஆர்வமாக இருந்தார். ஆனால் படம் தயாரிக்கும் அளவிற்கு அவரிடம் பணம் இல்லை. எனவே அவருடன் பணிப்புரியும் வங்கி ஊழியர்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படத்தை தயாரித்தார்.

அந்த திரைப்படத்தில் விக்ரமை கதாநாயகனாக நடிக்க வைத்தார். அதுதான் என் காதல் கண்மணி திரைப்படமாகும். இந்த திரைப்படம் அப்போது பெரிதாக வரவேற்பை பெறவில்லை. ஆனால் வங்கி ஊழியர்களே தமிழ் சினிமாவிற்கு விக்ரமை அறிமுகப்படுத்தினர் என்பது சுவாரஸ்யமான தகவலாகும்.

POPULAR POSTS

ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
ajith
dhanush-karthik-kumar
To Top