Latest News
கருப்பாகுறதுக்காக தினமும் வெயில்ல நிக்க வச்சாங்க! – அயலி தொடர் பற்றி பேசிய அபி நக்சத்ரா!
தல தளபதி போட்டிகளுக்கு இடையேயும் கடந்த வாரத்தில் மிகவும் ட்ரெண்டாகி வந்த டிவி சீரிஸ் அயலி.
வரலாறு நெடுகிலும் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அடிமை முறையை குறித்து பேசும் முக்கியமான தொடராக அயலி உள்ளது. இதனால் இந்த தொடர் அதிக வரவேற்பை பெற்றது. கிராமத்தின் மாற்றத்திற்காக போராடும் முக்கிய கதாபாத்திரம் தமிழ் செல்வி.
இந்த தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் அபி நக்சத்ரா என்னும் பெண் நடித்திருந்தார். அபி நக்சத்ரா வெள்ளை நிறத்தில் இருக்கும் பெண்ணாக இருக்கிறார். ஆனால் கதை ஒரு கிராமத்தில் நடக்கிறது என காட்டும்போது கிராமத்து பெண்ணை வெள்ளை நிற பெண்ணாக காட்ட முடியாது.
எனவே இயக்குனர் முத்துகுமார் தினமும் சிறிது நேரம் அபி நக்சத்ராவை வெயிலில் நிற்க வைத்து இந்த தொடருக்காக கருப்பாக மாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்த யாருக்குமே மேக்கப்பே செய்யவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை அபி நக்சத்ரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.