மங்காத்தாவை விட சிறப்பான கதை இருக்கு!.. ஆனா அஜித் கண்டுக்கவே மாட்டேங்குறார்.. விரக்தியடைந்த வெங்கட்பிரபு!..

Vengat prabhu, Ajith: தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் இயக்கிய சென்னை 28, கோவா போன்ற திரைப்படங்கள் இப்போதும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் திரைப்படங்கள் ஆகும்,

முக்கியமாக அஜித்தை வைத்து இவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம் முற்றிலுமாக வெங்கட் பிரபு திரைப்படத்திலிருந்து ஒரு மாறுபட்ட திரைப்படமாக இருந்தது. அஜித்திற்கும் வெங்கட் பிரபுவிற்கும் ஒரு முக்கியமான திரைப்படமாக மங்காத்தா இருந்தது.

Social Media Bar

அதற்குப் பிறகு தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு மங்காத்தா படத்தின் வெற்றிக்கு பிறகு மங்காத்தா போலவே மங்காத்தாவை விடவும் சிறப்பான ஒரு கதையை அவர் எழுதி வைத்திருந்தார்.

ஆனால் மங்காத்தா படத்திற்குப் பிறகு அஜித்தின் மார்க்கெட் வெங்கட் பிரபுவை விட பெரிதாக சென்றதால். அதற்குப் பிறகு அவர் வெங்கட் பிரபுவை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பலமுறை வெங்கட் பிரபு அஜித்தை சந்திக்க முயற்சி செய்தும் கூட கதையை கேட்க கூட அஜித் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

இதனை அடுத்துதான் தற்சமயம் விஜய்யை வைத்து பாடம் இயக்கும் வேளையில் இறங்கி இருக்கிறார் வெங்கட் பிரபு. என்று பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.