மர்ம கதை இயக்குனரோடு கூட்டணி.. ரிஸ்க் எடுக்கும் ஜீவா..

ஒரு காலகட்டத்தில் வளர்ச்சி பெற்ற நடிகராக இருந்து வந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து பெரிதாக வரவேற்பு இல்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா.

ஜீவா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை. ஆனால் அவர் நடித்த பிளாக் என்கிற திரைப்படம் மட்டும் பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது.

ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 10 கோடிக்கு ஓடி வசூல் சாதனை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து அடுத்து ஜீவா மீண்டும் பிளாக் திரைப்படத்தை இயக்கிய கேஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Social Media Bar

பிளாக் திரைப்படத்தை பொறுத்த வரை இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. படத்தின் கதையமைப்பு நிறைய பேருக்கு புரியவில்லை என்று கூறி இருந்தனர்.

எனவே அடுத்து கேஜி பாலசுப்ரமணியம் இயக்கம் திரைப்படத்திலாவது மக்களுக்கு புரியும் வகையில் கதையை கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.