Connect with us

கமலோட கண்ணாடில பார்த்தா தலையே சுத்தும்.. – சுந்தர் சியை வியக்க வைத்த கமல்ஹாசன்..!

Cinema History

கமலோட கண்ணாடில பார்த்தா தலையே சுத்தும்.. – சுந்தர் சியை வியக்க வைத்த கமல்ஹாசன்..!

Social Media Bar

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான ஒரு நடிகர் என பலரால் புகழப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு நடிக்க கூடியவர். அவர் அப்படி நடிக்கும் திரைப்படங்கள் பல வருடங்கள் ஆனாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் படமாக இருக்கும்.

அப்படியாக அவர் நடித்த திரைப்படம்தான் அன்பே சிவம். இப்போதும் கூட கமல் ரசிகர்களின் விருப்பமான திரைப்படங்களில் அன்பே சிவம் திரைப்படத்திற்கு முக்கியமான ஒரு இடம் இருக்கும். அன்பே சிவம் திரைப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கினார்.

அந்த படத்தில் கமல்ஹாசன் கால் ஊனமான கண் பார்வை பிரச்சனையாக இருக்கும் நபராக நடித்திருப்பார். இதற்காக கண் பார்வை பிரச்சனை உள்ளவர்கள் அணியும் கண்ணாடியை கமல்ஹாசன் அணிந்தார்.

நல்லப்படியாக கண் பார்வை உள்ளவர்கள் அந்த கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்த்தால் அவர்களுக்கு தலை எல்லாம் சுத்த துவங்கிவிடுமாம். எனவே இதற்காக கமல்ஹாசனுக்கு கண்ணில் ஒரு லென்சு பொருத்தப்பட்டது. அதன் மூலம் அந்த கண்ணாடியை மாட்டிக்கொண்டு கமல் நடிக்க முடிந்தது.

அதே போல படத்தில் அவரை கால் ஊனமாக காட்டுவதற்காக ஒரு ஷூவை உயரம் அதிகமாகவும் ஒரு ஷூவை உயரம் குறைவாகவும் உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் இயற்கையாகவே கால் ஊனமாக உள்ள நபர் போல கமலால் நடிக்க முடிந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு திரைப்படத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் நடிக்கும் நடிகராகதான் இப்போதும் கமல் இருக்கிறார்.

To Top