தமிழ் சினிமாவில் தற்பொழுது இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஒரு நடிகர் இருந்தார் என்றால் அது பிரசாந்த் தான். இவர் தற்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய். அஜித்திற்கு போட்டியாக அந்த காலத்திலேயே தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்தார் பிரசாந்த்.
இவர் திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட பிறகு தான் இவருக்கு தற்பொழுது முன்னணி நடிகர் என்ற வாய்ப்பு போய்விட்டது. இல்லையென்றால் இவருக்கு இருந்த ரசிகர்களுக்கு இந்நேரம் இவர் முன்னணி நடிகராக இருந்திருப்பார்.
தற்பொழுது இவர் ஹெல்மெட் அணியாமல் நீதிமன்றத்தில் ரூ. 1000அபராதம் கட்டியது குறித்து ஒரு செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நடிகர் பிரசாந்த்
நடிகர் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு என்னும் திரைப்படத்தில் தனது 17 வது வயதில் நடிக்க வந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அதன் பிறகு நடித்த செம்பருத்தி படமும் அவருக்கு வெற்றி பெற்று கொடுத்தது. இவ்வாறு அவர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வெற்றிகளை குவித்து கொண்டிருந்தார்.
மேலும் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன் பிறகு அவர் நடித்த அனைத்து படங்களுமே வரிசையாக வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தது.

இதனால் இவரை அடுத்த தலைமுறையின் ஹீரோ என்று கூட அழைத்தார்கள். ஆனால் இவருக்கு திருமணம் ஆன பிறகு குடும்ப பிரச்சனை காரணமாக இவர் நடிப்பதை விட்டு விட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தற்பொழுது தான் பிரசாந்த் அந்தகன் படத்தின் மூலம் ரீ-எண்டரி கொடுக்க இருக்கிறார்.
இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியாக போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
போலீசில் சிக்கிய நடிகர் பிரசாந்த்
இந்நிலையில் அந்தகன் படத்தின் ப்ரோமோஷனுக்காக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் பிரசாந்த். இந்நிலையில் பேட்டி ஒன்றில் தொகுப்பாளினியை தன் பைக்கின் பின்னாடி உட்கார வைத்து கேள்விகளுக்கு பதில் சொல்லி வந்தார் பிரசாந்த்.
அவர் பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணியவில்லை. இதனால் ரூ.1000 அபராதமாக நீதிமன்றத்தில் கட்டினார். இந்நிலையில் திருச்சியில் பட பிரமோஷனுக்காக சென்ற பொழுது பிரசாந்திடம் நிருபர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார்.

இதனை நீங்கள் கேட்பீர்கள் என தெரியும். அதனால் நான் தயாராக வந்துள்ளேன் என கூறிய பிரசாந்த். நான் ஹெல்மெட் அணிவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறேன். மேலும் சொந்த செலவில் நிறைய பேருக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்திருக்கிறேன். நான் ரூ.1000 அபராதம் கட்டியதும் ஒரு விழிப்புணர்வாக இருக்கட்டும் என பிரசாந்த் கூறினார்.
மேலும் அருகில் இருந்த பிரியா ஆனந்த் “ஐயோ நான் தான் அவரை டேர் செய்திருந்தேன்.. ஹெல்மெட் அணியாமல் போக முடியுமா? என சவால் விட்டிருந்தேன் ” என அவர் கூறியிருந்தாராம்.






