Connect with us

படப்பிடிப்பில் காலையில் இருந்து சூரியை பட்டினி போட்ட இயக்குனர்.. பரோட்டா சீனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

actor soori

Latest News

படப்பிடிப்பில் காலையில் இருந்து சூரியை பட்டினி போட்ட இயக்குனர்.. பரோட்டா சீனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கும் பலர் தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்கள். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய வாழ்க்கையைதொடங்கிய சூரி தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பிரபலம் அடைய வைத்த காமெடி தான் பரோட்டா சாப்பிடும் காட்சி. இது ரசிகர்களுக்கிடையே பிரபலமான நகைச்சுவை காட்சியாகும். இந்த காட்சி எடுக்கும் போது சூரி தன்னுடைய அனுபவத்தை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூரி

சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தன்னுடைய திறமையை மட்டும் நம்பி சினிமாவிற்குள் நுழைந்த சூரி ஆரம்ப காலகட்டத்தில் பின்னணி நடிகராக நடித்து வந்தார். இவர் வெண்ணிலா கபடி குழுவின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சையமான நடிகராக மாறினார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் பல படங்களில் காமெடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

soori

இவரின் தனித்துவமான நகைச்சுவைக்கு ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கிய நிலையில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் ஒன்றில் நடித்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து தற்போது கருடன் கொடுக்காளி ஆகிய திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து உள்ளார்.

பரோட்டா காமெடி எடுக்கும் போது நடிகர் சூரிக்கு நடந்த சம்பவம்

நடிகர் சூரியை மக்களுக்கு பிரபலப்படுத்தியது வெண்ணிலா கபடி குழுவில் வரும் பரோட்டா நகைச்சுவை காட்சி. இது குறித்து அவர் கூறும் போது, அந்தக் காட்சி இரவு 10 மணிக்கு படமாக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் எனக்கு காலையிலிருந்து சாப்பாடு எதுவும் கொடுக்கக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.

டீ கொடுக்கும் போது கூட சிறிதளவு தான் கொடுத்தார்கள். மேலும் அந்த காட்சியில் நான் நடிக்கும் போது 13 பரோட்டாக்கள் சாப்பிட்டேன். ஏனென்றால் காலையில் இருந்து நான் சாப்பிடாமல் இருந்தேன். மேலும் 13 பரோட்டாக்கள் சாப்பிடும் போது குமட்டிக்கொண்டு வரும் அதனால் இரண்டு பரோட்டாவை யாருக்கும் தெரியாமல் வீசி விடுவேன். ஆனால் அதனை இயக்குனர் பார்த்துவிட்டு இதுபோல நீ செய்தால் மீண்டும் நடிக்கச் சொல்லுவேன் அதனால் ஒழுங்காக நடி என்று கூறினார்.

காட்சியை எடுத்த பிறகு இயக்குனர் சொன்னார், இந்த காட்சியை சாப்பிட்டு நடித்தால் ஏதோ படத்திற்காக நீ நடிப்பது போல தோன்றும். முகம் காட்டி கொடுத்துவிடும். ஆனால் இப்போது நீ உண்மையாக நடித்தது போல இருக்கும். அதனால் தான் காலையில் இருந்து உனக்கு சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை என இயக்குனர் கூறியதாக நடிகர் சூரி பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

divya duraisamy 3
dhanush meena
sasikumar
ttf vasan zoya
To Top