சூர்யா செஞ்ச மிகப்பெரிய சாதனை..! எத்தனை பேருக்கு உதவியிருக்கார் பாருங்க..!
நடிகர்களை பொருத்தவரை எப்பொழுதுமே அவர்கள் செய்யும் உதவிகளை பலரும் வெளியே சொல்லிக் கொள்வது கிடையாது.
இப்படி கிட்டத்தட்ட 15 வருடங்களாக பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சூர்யா துவங்கிய தொண்டு நிறுவனம்தான் அகரம். அகரம் மூலமாக நிறைய மாணவர்கள் பயனடைந்து இருக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் பெரிய படிப்பை படிக்க நினைக்கும் வறுமையில் இருக்கும் மாணவர்களுக்கு அகரம் உதவி செய்கிறது. அதன் மூலமாக வெற்றி அடைந்தவர்கள் பலர் என்று கூறலாம்.

சமீபத்தில் அகரம் நிறுவனத்தின் 15 வது ஆண்டு விழா நடந்தது. அந்த விழாவில் சூர்யாவால் பயனடைந்த மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பேசியிருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் முக்கிய தகவலை சூர்யா பகிர்ந்தார்.
அதில் அவர் கூறும்போது 160 மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தான் அகரம் நிறுவனம் உருவானது ஆரம்பத்தில் 160 மாணவர்களை கொண்டுதான் செயல்பட்டு வந்தது. ஆனால் இந்த 15 வருடங்களில் 6800க்கும் அதிகமான மாணவர்களுக்கு உதவி இருக்கிறது அகரம் என்று கூறியிருக்கிறார் சூர்யா.
15 வருடத்தில் இவ்வளவு மாணவர்களுக்கு தனி ஒரு மனிதராக சூர்யா உதவி இருப்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.