Connect with us

இனி படத்தில் நடிக்க போவதில்லை!.. கதை கேட்பதை நிறுத்திய நடிகர் விஷால்..

Vishal-1

Latest News

இனி படத்தில் நடிக்க போவதில்லை!.. கதை கேட்பதை நிறுத்திய நடிகர் விஷால்..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பு உண்டு எனக் கூறலாம்.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்தது. மேலும் விஷாலுக்கு அது ஒரு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக அமைந்தது. செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் விஷால்.

அதற்குப் பிறகு அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அவரை வளர்த்து விட்டதில் ஹரி மற்றும் லிங்குசாமிக்கு முக்கியமான பங்கு உண்டு என்று கூறலாம். லிங்குசாமி இயக்கத்தில் இவர் நடித்த சண்டக்கோழி படமும் ஹரி இயக்கத்தில் இவர் நடித்த தாமிரபரணி திரைப்படமும்தான்.

விஷால் எடுத்த முடிவு:

இவை இரண்டுமே இவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த திரைப்படங்கள். அதற்குப் பிறகு வேறு எந்த திரைப்படமும் அவருக்கு அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.

இந்த நிலையில் ரத்தினம் திரைப்படத்திற்கு பிறகு திரைப்படங்களின் கதைகளை கேட்பதை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளாராம் விஷால். அதனால் விஷால் சினிமா துறையை விட்டுப் போகப் போகிறாரா என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஆனால் உண்மையில் விஷால் அடுத்து அவரே இயக்கி நடிக்கவிருக்கும் திரைப்படமான துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரையிலும் வேறு எந்த படத்திலும் அவர் கமிட் ஆவதாக இல்லை என்பதால் தற்சமயம் கதை கேட்பதை அவர் நிறுத்தி வைத்துள்ளாராம்.

மேலும் கதை கேட்பதற்காகவே ஒரு குழுவை அமைத்து வருகிறாராம் கார்த்தி. அந்த குழு தரும் முடிவை வைத்துதான் இனி திரைப்படங்களில் அவர் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த காரணத்தினாலேயே தற்சமயம் படங்களின் கதையை கேட்பதை நிறுத்தி வைத்திருக்கிறார் நடிகர் விஷால்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top