குஷ்பு, தமன்னா எல்லாம் செஞ்ச அட்ஜெஸ்ட்மெண்ட்?.. சிக்கிய நடிகை கஸ்தூரி..!

Actress Kasthuri was a popular actress in Tamil cinema at one time. Now she has acted as the heroine along with many famous actors.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இப்போது பிரபல நடிகர்களாக இருந்த பலருடனும் சேர்ந்து கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் இப்பொழுது கஸ்தூரி பேசி வரும் விஷயங்கள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அரசியலில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி தொடர்ந்து சினிமா குறித்தும் மக்கள் குறித்தும் நிறைய விஷயங்களை பேசுகிறார்.

kasthuri
kasthuri
Social Media Bar

அவையெல்லாம் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியான போது கூட முகுந்த் வரதராஜன் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை. அவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதை படத்தில் காட்டி இருக்க வேண்டும் என்று அவர் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

கஸ்தூரி கிளப்பிய சர்ச்சை:

அதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் பதிலளித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பேசிய இன்னொரு விஷயம் இப்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

thammana
thammana

ஒரு பேட்டியில் பேசிய அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்றால் தமன்னா, குஷ்பூ, ஐஸ்வர்யாராய் மாதிரி நானும் பெரிய நடிகையாக மாறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அப்படி என்றால் தமன்னா குஷ்பு எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பெரிய நடிகையானார்கள் என்று கஸ்தூரி கூறுகிறாரா? என்று கேள்வி எழுப்பத் துவங்கி இருக்கின்றனர் இந்த நிலையில் கஸ்தூரி பேசிய அந்த பேட்டி இப்போது பிரபலம் அடைய துவங்கி இருக்கிறது.