Latest News
படப்பிடிப்பில் பாலா என்னை அடிச்சார்!.. வணங்கான் படத்தை விட்டு நடிகை விலக இதுதான் காரணமா?..
Director Bala: தமிழில் அதிக சர்ச்சைக்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து சில வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பாலா. பாலா இயக்கத்தில் தமிழில் வரும் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்றாலும் கூட நிஜ வாழ்க்கையில் பாலாவை வைத்து நிறைய விமர்சனங்கள் மக்கள் மத்தியில் வருகின்றன.
படப்பிடிப்பு தளங்களில் பாலா நடிப்பவர்களிடம் மிக மோசமாக நடந்து கொள்வார் என்கிற பேச்சு வெகு நாட்களாகவே இருந்து வந்தது. அதேபோல தனது உதவி இயக்குனர்களிடமும் பாலா மோசமாக நடந்து கொள்வார் என்று கூறப்படுவதுண்டு.
இதனாலையே பாலாவின் திரைப்படங்களும் அதிகமாக தோல்வியை காண துவங்கின சமீபத்தில் பாலா இயக்கிய எந்த திரைப்படமும் தமிழில் பெரிதாக வெற்றி காணவில்லை என்று கூறலாம். இதனால் பாலாவிற்கான வாய்ப்புகளும் குறைந்தது.
ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் எடுப்பதே அவருக்கு கடினமான விஷயம் என்கிற நிலை உருவானது. இதற்கு தகுந்தார் போல பரதேசி திரைப்படம் வெளியான பொழுது அந்த படப்பிடிப்பு தளத்தில் அவர் பலரையும் தாக்கியது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் சச்சரவை ஏற்படுத்தியது.
ஆனால் அப்பொழுது அதை படப்பிடிப்பு தளத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று செய்து காட்டிய வீடியோதான் அது எனக் கூறி அந்த நிகழ்வை முடித்து வைத்தனர். ஆனால் தற்சமயம் வணங்கான் திரைப்படத்திலும் அந்த பிரச்சனை துவங்கியிருக்கிறது.
வணங்கான் திரைப்படத்தில் முதலில் சூர்யாதான் கதாநாயகனாக நடிக்க இருந்தது. சூர்யா நடிக்க இருந்த பொழுது அந்த படத்தில் மலையாள நடிகை மமீதா கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் சில காலங்களில் படத்திலிருந்து சூர்யா விலகினார்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டியில் பேசிய மமீதா கூறும் பொழுது படப்பிடிப்பு தளத்தில் பாலா தன்னை அடித்தார் என்று வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார். எனவே இதுதான் ஒரு படத்தில் இருந்து விலக காரணமா? என்று பேச்சுக்கள் எழுந்துள்ளன மேலும் பாலா உண்மையிலேயே படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் அடிக்கக் கூடியவரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.