Connect with us

குழந்தையையும் கூட்டிட்டு வருவேன்… தினமும் 1 லட்சம் சம்பளம் தரணும்!.. நயன்தாரா போட்ட ரூல்ஸால் விழி பிதுங்கும் தயாரிப்பாளர்கள்!.

nayanthara

Latest News

குழந்தையையும் கூட்டிட்டு வருவேன்… தினமும் 1 லட்சம் சம்பளம் தரணும்!.. நயன்தாரா போட்ட ரூல்ஸால் விழி பிதுங்கும் தயாரிப்பாளர்கள்!.

cinepettai.com cinepettai.com

Nayanthara: அன்னப்பூரணி திரைப்படம் வெளியானது முதலே நயன்தாராவிற்கு வாய்ப்பு கொடுப்பது என்பது தயாரிப்பாளருக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும் விஷயமாக அமைந்துள்ளது. ஏனெனில் 12 கோடிக்கு எடுக்கப்பட்ட அன்னப்பூரணி திரைப்படம் 1 கோடி கூட வசூல் செய்யாமல் பெரும் தோல்வியை கண்டது.

அதனை தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு அந்த படத்தை விற்றதன் மூலம் ஏதோ ஒரு வருவாய் கிடைத்தது. ஆனாலும் தனது சம்பள விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யாமல் இருக்கிறார் நயன் தாரா. மேலும் அவர் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறார் என நயன்தாரா குறித்து கருத்து தெரிவிக்கின்றனர் சினிமா பத்திரிக்கையாளர்கள்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் தற்சமயம் ஒரு திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது ஊட்டியில்தான் நடத்தப்பட இருந்தது. ஆனால் தனது இரு குழந்தைகளை விட்டு விட்டு ஊட்டி வந்து நடிக்க முடியாது. எனவே ஊட்டி மாதிரி சென்னையிலேயே ஷெட் போடுங்கள் என நயன்தாரா வலியுறுத்தியது ஏற்கனவே சர்ச்சையானது.

ஜவான் படத்திற்காக வட இந்தியா வரை போக முடியும். ஆனால் இங்கிருக்கும் ஊட்டிக்கு போக முடியாதா என பலரும் அப்போது கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தற்சமயம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இந்த படப்பிடிப்புக்கு வரும்போது தனது இரு குழந்தைகளையும் சேர்த்து அழைத்து வருகிறாராம் நயன்தாரா, அவரால் தனது குழந்தையை பிரிந்து இருக்கவே முடியவில்லையாம். குழந்தையையும் நயனையும் பார்த்துக்கொள்ள மட்டும் 5 பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐவருக்கும் தினம் 20,000 சம்பளம் என மொத்தம் 1 லட்ச ரூபாய் சம்பளமாக தரப்படுகிறது. அதையும் தயாரிப்பு நிறுவனமே தருகிறது என கூறப்படுகிறது. இதனால் எப்போது படப்பிடிப்பு முடியும் என காத்திருக்கிறதாம் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்.

POPULAR POSTS

vijay sree leela
kavin
vijay ghilli
vairamuthu-yaashika
vishal vijay ghilli
kpy bala
To Top