Connect with us

விஜயகாந்தோட ஆவி கூட ராதிகாவை மன்னிக்காது!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

vijayakanth radhika

News

விஜயகாந்தோட ஆவி கூட ராதிகாவை மன்னிக்காது!.. கடுப்பான பத்திரிக்கையாளர்!.

Social Media Bar

எம்.ஜி.ஆருக்கு பிறகு திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் நிறைய உதவிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களில் அதிகபட்சம் புதுமுக இயக்குனர்களுக்குதான் வாய்ப்பு கொடுப்பார்.

ஏனெனில் மாணவர்களாக கல்வி பயின்று திரைத்துறையில் வரும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் இயக்குனராக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதனை அறிந்த விஜயகாந்த் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார்.

எப்படி வெற்றிமாறனும் தனுஷும் ஒரு காம்பாக இப்போது கலக்கி வருகிறார்களோ அதேபோல அப்பொழுது எஸ்.ஏ சந்திரசேகரும் விஜயகாந்தும் ஒரு காம்போவாக சினிமாவில் கலக்கி வந்து கொண்டிருந்தனர்.

vijayakanth
vijayakanth

அந்த சமயத்தில்தான் விஜயகாந்த் திரைப்படங்களில் ராதிகா நடிக்க தொடங்கினார். ராதிகாவிற்கும் விஜயகாந்திற்க்கும் இடையே நல்ல நட்பு உருவானது. அதனை தொடர்ந்து விஜயகாந்தின் படங்கள் பலவற்றில் ராதிகா கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் அப்பொழுது பேச்சுக்கள் இருந்தன. அதேபோல விஜயகாந்த் ராதிகாவை திருமணம் செய்ய இருந்ததாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன ஆனால் விஜயகாந்தின் நண்பரான ராவுத்தர் அவர்கள் இருவரும் சேராமல் செய்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும் பொழுது ராதிகாவிற்கும் சரி திரைத்துறையில் உள்ள மற்றவர்களுக்கும் சரி எவ்வளவு நன்மைகளை செய்திருக்கிறார் விஜயகாந்த். ஆனால் விருதுநகர் தொகுதியில் தற்சமயம் ராதிகா விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரனுக்கு எதிராக போட்டியிடுகிறார்.

இந்த விஷயத்தை ஆவியாக இருந்து பார்க்கும் விஜயகாந்த் கண்டிப்பாக ராதிகாவை மன்னிக்க மாட்டார். திரைத்துறையில் உங்களுக்கெல்லாம் எவ்வளவோ செய்தேன் கடைசியில் என் மகனை இப்படி எதிர்த்து நிற்கிறீர்களே என்று தன் விஜயகாந்த் நினைப்பார் என்று கூறுகிறார் செய்யாறு பாலு.

Articles

parle g
madampatty rangaraj
To Top