Connect with us

குழந்தை பெற்று கணவருடன் செட்டில் ஆன சமந்தா.. பிரபலம் சொன்ன தகவல்!.

samantha naga chaitanya

News

குழந்தை பெற்று கணவருடன் செட்டில் ஆன சமந்தா.. பிரபலம் சொன்ன தகவல்!.

Social Media Bar

சினிமாவில் தொடர்ந்து பல போராட்டங்களை சந்தித்து அதற்குப் பிறகு சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்துக் கொண்டவர் நடிகை சமந்தா ஆரம்பத்தில் பானா காத்தாடி மாதிரியான திரைப்படங்களில் நடிக்கும் போது மிகவும் சின்ன பெண்ணாக இருந்தார் சமந்தா.

அப்பொழுது அவரை பலரும் கதாநாயகியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட படங்களில் நடித்து வந்தார் சமந்தா. இந்த நிலையில் நான் ஈ திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

தெலுங்கில் வரவேற்பு:

பிறகு தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது தெலுங்கில் அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெற்றது. தமிழில் நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படம் அவருக்கு வேற லெவல் வரவேற்பு பெற்று கொடுத்தது.

நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்திற்கு பிறகு சமந்தாவிற்கு அதிகமான ரசிகர்கள் உருவாக துவங்கினார்கள். அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வரவேற்பை பெற்றார் சமந்தா. தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில்தான் இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் நடந்த சில வருடங்களிலேயே இவர்கள் இருவருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

வாழ்க்கை செட்டில்மெண்ட்:

அதற்கு பிறகு சோபிதா என்கிற பெண்ணை காதலித்து நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமந்தா உடல்நிலை குறைபாடு ஏற்படுவதற்கு முன்பு நடித்த திரைப்படம் சாகுந்தலம்.

இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளர் நீலிமா சமந்தா ஒரு பேட்டியை சமீபத்தில் கொடுத்திருந்தார். அதில் சமந்தா குறித்து அவர் பேசி இருந்த விஷயம் அதிக வைரலாகி வருகிறது. இதில் அவர் கூறும் பொழுது இந்த படத்தின் கதை சமந்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டது.

அதனால் கதையை கேட்ட உடனே படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் மேலும் அவர் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த படத்தின் வேலைகளை முடிக்குமாறு கூறினார். அந்த படத்திற்குப் பிறகு சினிமாவை விட்டுவிட்டு குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு செட்டிலாகி காலத்தை கழிக்க விரும்புகிறேன் என்று சமந்தா கூறினார் என்கிறார் நீலிமா சமந்தா .

Articles

parle g
madampatty rangaraj
To Top