Connect with us

மாரிமுத்துவுக்கு ரெண்டு முறை வாழ்க்கை கொடுத்தவர் அஜித்!.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

marimuthu ajithkumar

Cinema History

மாரிமுத்துவுக்கு ரெண்டு முறை வாழ்க்கை கொடுத்தவர் அஜித்!.. இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

cinepettai.com cinepettai.com

தமிழில் தொடர்ந்து அதிக வசூல் சாதனை படைக்கும் திரைப்படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு வரவேற்பு உண்டு. அதையும் தாண்டி பன்முகத் திறமை கொண்டவர் அஜித் என்பதாலேயே அஜித்தை பலருக்கும் பிடிக்கும்.

இளமை காலங்களில் அஜித் வளர்ந்த நாயகனாக இருந்தப்போது பல இயக்குனர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்துள்ளார். முக்கியமாக இயக்குனர் எஸ்.ஜே சூர்யா வின் முதல் படத்தில் ஹீரோவாக நடித்துக் கொடுத்து அவரை வளர்த்து விட்டவர் நடிகர் அஜித் தான். அஜித் ஆசை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடிகர் மாரிமுத்துவும் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வந்தனர்.

அவர்கள் இருவருக்குமே வாய்ப்பு கொடுப்பதாக கூறியிருந்தார் அஜித் அதன்படி எஸ்.ஜே சூர்யாவிற்கு வாலி திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு மாரிமுத்துவை அழைத்து ஏதாவது ஒரு கதை எழுதுங்கள் உங்கள் திரைப்படத்தில் நான் நடிக்கிறேன் என்று கூறினார்.

ஆனால் அப்பொழுது அஜித்தை வைத்து படம் இயக்கும் அளவிற்கு மாரிமுத்துவிற்கு தைரியம் இருக்கவில்லை. எனவே அவர் நிராகரித்துவிட்டார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் அஜித் மாரிமுத்துவிடும் பேசும்போது எவ்வளவு நாள் இப்படியே இருக்க போகிறீர்கள், இயக்குனராக ஆசை இல்லையா? நான் வாய்ப்பு தருகிறேன் என்னை வைத்து ஒரு படம் எடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் அப்பொழுதும் மாரிமுத்து அதை மறுத்துள்ளார் பிறகு ஒரு பேட்டியில் மாரிமுத்து கூறும் பொழுது பெருந்தன்மையாக அஜித் இருமுறை கேட்டும் நான் அவரை வைத்து படம் எடுக்காமல் விட்டது பெரும் தவறு என்று கூறியுள்ளார்.

To Top