Connect with us

இந்த மண்ணை மதிக்க தெரியணும்.. தமிழனுக்கு மரியாதை கொடுத்து பேசிய அல்லு அர்ஜுன்..!

allu arjun

Tamil Cinema News

இந்த மண்ணை மதிக்க தெரியணும்.. தமிழனுக்கு மரியாதை கொடுத்து பேசிய அல்லு அர்ஜுன்..!

Social Media Bar

தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அல்லு அர்ஜுன் தொடர்ந்து நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார்.

ஆரம்பத்தில் அவர் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வந்தது. அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு பெற்றார் அல்லு அர்ஜுன்.

இந்த நிலையில் அவர் நடித்திருக்கும் புஷ்பா திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவிற்கு தமிழிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.

புஷ்பா 2 திரைப்படம்:

இந்த நிலையில் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து வரவிருக்கிறது. அந்தப் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. இந்த நிலையில் விழாவிற்கு வந்த பிரபலங்கள் பலரும் முடிந்த அளவு தமிழில் பேசி வந்தனர்.

pushpa 2

pushpa 2

நடிகை ராஸ்மிகாவும் மேடை ஏறிய பிறகு திக்கி திக்கி தமிழில் பேசியதை பார்க்க முடிந்தது. ஆனால் அல்லு அர்ஜுன் மேடையில் ஏறியவுடன் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் மிக சிறப்பாக தமிழில் பேசினார். மேலும் அவர் கூறும் பொழுது தெலுங்கு மக்கள் இந்த அரங்கத்தில் இருப்பது எனக்கு தெரியும்.

அல்லு அர்ஜுன் பேச்சு:

இருந்தாலும் ஏன் தமிழில் பேசுகிறேன் என்றால் இந்த தமிழ் மண்ணுக்கு அது நாம் கொடுக்கும் மரியாதை. எந்த ஒரு இடத்துக்கு போனாலும் நாம் அந்த மொழியில் முடிந்த அளவிற்கு பேச முயற்சி செய்ய வேண்டும். நான் துபாய் போனால் அரபியில் பேசுவேன்.

பாலிவுட்டிற்கு சென்றால் அங்கு ஹிந்தியில் பேசுவேன் அதுதான் நாம் அந்த மண்ணுக்கு கொடுக்கும் மரியாதை என்று கூறியிருக்கிறார் அல்லு அர்ஜுன் அவரின் இந்த பேச்சுக்கு இப்பொழுது வரவேற்பு அதிகரிக்கத் வங்கி இருக்கிறது.

Articles

parle g
madampatty rangaraj
To Top