Tamil Cinema News
அல்லு அர்ஜுன் வாய்விட்டதால் சிக்கிய நடிகர் கார்த்தி.. வச்சு செய்யும் ரசிகர்கள்.!
தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுன் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஆனால் அவரது திரைப்படங்கள் அதிகமாக தமிழில் டப்பிங் ஆகி வெளிவர துவங்கின. அதற்குப்பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கென்று தனி செல்வாக்கு உருவானது.
இப்பொழுது புஷ்பா திரைப்படம் வெளியான பிறகு இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார் அல்லு அர்ஜுன். அவர் நடித்த புஷ்பா திரைப்படம் வட இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்றது. தற்சமயம் புஷ்பா திரைப்படத்திற்கும் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.
அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்:
இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திற்கான ப்ரமோஷனுக்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார் அல்லு அர்ஜுன். தமிழ்நாட்டுக்கு வந்த அல்லு அர்ஜுன் மேடையில் ஏறி சகஜமாக தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது ரசிகர்கள் சிலர் அவரை தெலுங்கில் பேசுமாறு கேட்டனர்.
ஆனால் அவர் கூறும் பொழுது இது தமிழ் மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை. எனவே தமிழில்தான் பேசுவேன் என்று விடாப்பிடியாக கூறிவிட்டார். இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நிறைய பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதே சமயம் நடிகர் கார்த்தி மற்றும் ஒரு நடிகை சுஹாசினி இருவரையும் விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். ஏனெனில் கார்த்தி ஒருமுறை தெலுங்கில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது தமிழ் ரசிகர்களை விட எனக்கு தெலுங்கு ரசிகர்களை தான் பிடிக்கும் என்று கூறி இருந்தார்.
அதேபோல சுஹாசினியும் தமிழர்களை தாழ்வாக பேசி பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் பேசியிருந்தார். இதனால் இவர்கள் இருவரையும் தற்சமயம் விமர்சித்து வரும் ரசிகர்கள் அல்லு அர்ஜுனனை பார்த்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
