Connect with us

எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

vadivelu run

News

எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

எல்லோரும் ஓடுங்க!.. வேட்டியை அவிழ்த்து போட்டு ஓடிய படக்குழு!.. வடிவேலு படப்பிடிப்பில் நடந்த சம்பவம்..

Social Media Bar

வடிவேலுவின் திரைப்படங்கள் பொதுவாகவே காமெடியானவையாக இருக்கும். ஹீரோவாக நடித்தப்போது ஒரு கமர்சியல் கதாநாயகனாக அறிமுகமாகாமல் காமெடி கதாநாயகனாக வரிசையாக நடித்தது வடிவேலுவிற்கு ஒரு நேர்மறையான விஷயமாக அமைந்தது.

அதிலும் 23ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டும் வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தும் கூட வடிவேலுவை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். தற்சமயம் அவர் நடித்த மாமன்னன் திரைப்படத்தின் மூலமாக காமெடியை தாண்டியும் சில விஷயங்களை தன்னால் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் வடிவேலு.

ஒரு பேட்டியில் பேசும்போது இந்திரலோகத்தில் நா அழகப்பன் படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அவரது படம்தான் காமெடி என்றால் படம் எடுக்கும் பொழுதும் சில காமெடிகள் நடந்துள்ளன. காட்டிற்கு அருகில் உள்ள மலைக்கு அருகில் ஒரு காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்த பொழுது அவருடன் நடித்துக் கொண்டிருந்த சக ஊழியரான அல்வா வாசு திடீரென எல்லோரும் ஓடுங்க என்ன சத்தமாக கத்தியுள்ளார்.

ஏதோ மிருகம் வந்துவிட்டது போல என்று எண்ணிய பட குழு வேகமாக ஓட தொடங்கியுள்ளது. அப்பொழுது ஒரு பாடலின் படபிடிப்பு நடந்ததால் பாடலுக்கு நடனமாட வந்த பெண்களும் ஓடியுள்ளனர். வடிவேலும் வேகமாக ஓடிள்ளார், அவர் கூடவே நடிகர் தியாகுவும் ஓடிக் கொண்டிருந்தார்.

அப்போது அல்வா வாசு சும்மா இல்லாமல் அய்யோ அதுக்கு வெள்ளை நிறம் என்றால் ரொம்ப பிடிக்குமே என கத்தவும் கட்டி இருந்த வேட்டியை அவிழ்த்து போட்டுவிட்டு ஓடியுள்ளார் தியாகு. அதற்குப் பிறகு அல்வா வாசு எல்லாரையும் பார்த்து கீழே படுங்கள் என்று கூறியுள்ளார்.

எல்லாரும் உடனே தரையை நோக்கி படுத்துள்ளனர். பிறகு வேகமாக எழுந்த வடிவேலு அல்வா வாசுவை பிடித்து எதுக்குடா எல்லோரையும் ஓட சொன்னாய் என கேட்டுள்ளார். அதற்கு அல்வா வாசு அண்ணே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் சிகரெட்டை பிடித்து விட்டு தேன் கூட்டின் மீது வீசிவிட்டார்.

தேனீ எல்லாம் கிளம்பி வந்தது அதனால்தான் ஓட சொன்னேன் என்று கூறியுள்ளார். அதுவரை எந்த மிருகம் துரத்துகிறது என்று தெரியாமலே மொத்த கூட்டமும் ஓடியுள்ளது. இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் வடிவேலு.

To Top