அறமே வெல்லும்! – விக்ரமனிற்கு குவியும் ஆதரவுகள்

தமிழில் இரண்டு மாதங்களுக்கு முன்பு துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.

Social Media Bar

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த ஜனனி, தனலெட்சுமி போன்ற பல போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர். இன்னும் சிலர் மட்டும் போட்டியில் இருந்து வருகின்றனர். இதில் யார் வெல்ல போவது என்கிற போட்டிதான் தற்சமயம் பெரிதாக சென்றுக்கொண்டுள்ளது.

அசிம் மற்றும் விக்ரமன் இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் துவங்கிய நாள் முதலே அசிம் பலருடன் சண்டை போட்டுக்கொண்டு, இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி வந்தார். இதனால் அசிம் மீது பலருக்கு வெறுப்பு இருந்து வந்தது. அதே காரணத்தால் அசிமிற்கு ரசிக வட்டாரமும் உருவானது.

அதே போல விக்ரமன் அரசியல் ரீதியான பார்வையில் இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையையும் பேசும் முன் மிகவும் யோசித்து பேசி வந்தார் என கூறப்படுகிறது. தன்னை திட்டுபவர்களிடம் கூட அவர் இழிவான வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

எனவே இருவரில் விக்ரமன்தான் ஜெயிக்க வேண்டும் என பலரும் ஆசைப்படுகின்றனர். பிக்பாஸில் மக்கள் போடும் ஓட்டை வைத்துதான் வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுகின்றனர். எனவே அறம் வெல்லும் என்கிற ஹேஷ் டேக்கை விக்ரமனிற்காக ட்ரெண்ட் செய்து வருகின்றனர் மக்கள்.