Tamil Cinema News
என் அம்மா அப்பாக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.. வெளிப்படையாக பதிவிட்ட டிராகன் பட இயக்குனர்.!
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக மாறியிருப்பவர் நடிகர் அஸ்வத் மாரிமுத்து. எப்படி பிரதீப் ரங்கநாதன் இரண்டே திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமாகி இருக்கிறாரோ அதே போல இரண்டே திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து.
அவரது முதல் படமான ஓ மை கடவுளே திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. இருந்தாலும் தொடர்ந்து அடுத்த கதையை சில வருடங்கள் கழித்தே படமாக்கினார்.
அப்படியாக அவர் படமாக்கிய திரைப்படம்தான் டிராகன்., தற்சமயம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது டிராகன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் வழக்கமான காலேஜ் நாயகன் போலவே கதைக்களம் அமைந்தாலும் பிறகு கதையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
வாழ்க்கையில் முன்னேற கல்லூரி படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை திரைப்படம் உணர்த்துகிறது. இந்த படம் பலருக்கும் பிடித்த படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அஸ்வத் மாரிமுத்து.
அந்த பதிவில் அவர் கூறும்போது என் தாய் தந்தையரிடம் நான் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன். நான் மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவர்களது ஆசையில் மண்ணை அள்ளி போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். என் ஆசைக்காக என்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்து அதில் ஒழுங்காக படிக்காமலும் இருந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த மன்னிப்பு கேட்கும் விதமாகதான் டிராகன் படத்தை எடுத்தேன் என கூறியுள்ளார் அஸ்வத் மாரிமுத்து.
