டிராகன் மாதிரி படம் பண்ணினதால் வெற்றிமாறனால் நீக்கப்பட்டேன்.. ஓப்பன் டாக் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து..!
தற்சமயம் ஓ மை கடவுளே, டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வழியாகவும் ஹிட் கொடுத்த காரணத்தினால் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனராக மாறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.
அஸ்வத் மாரி முத்து இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களுமே தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்து இருக்கின்றன. இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்து அஸ்வத் மாரிமுத்துவிற்கு வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில் நாளைய இயக்குனரில் அவர் பங்கேற்றது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அதில் அவர் கூறும்பொழுது நாளைய இயக்குனருக்காக நான் எடுத்த திரைப்படம் ஃபுட்பால் பற்றிய ஒரு திரைப்படம்.

ஆனால் அதன் கிளைமாக்ஸ் கிட்டத்தட்ட டிராகன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் மாதிரி தான் இருக்கும். அப்பொழுது அந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெற்றிமாறன் சார் அந்த படத்தை எலிமினேட் செய்துவிட்டார்.
ஏனெனில் காட்சிப்படுத்துவதில் அதில் சில தவறுகளை நான் செய்திருந்தேன். அவற்றை எல்லாம் சரி செய்து நான் எடுத்த படம்தான் ஓ மை கடவுளே, டிராகன் எனவே நாம் செய்யும் பிழைகளை ஒருவர் சுட்டிக்காட்ட இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் சரி செய்து கொள்ள முடியும் என்று கூறியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.