Cinema History
அந்த நிகழ்வால் மிருகமாய் மாறிய ரஜினி.!- கட்டுப்படுத்திய பாலச்சந்தர் என்ன நடந்தது தெரியுமா?
பொதுவாக சாதாரண மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை ஒரு பெரும் வரம் போல தெரியும். அவர்களுடைய வாழ்க்கை மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை நம்மால் வாழ முடியாது என்பதால் நமக்கு அந்த வாழ்க்கை பெரிய விஷயமாக இருக்கும்.
ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கும் அந்த வாழ்க்கை அப்படித்தான் இருக்குமா? என்பது கேள்விக்குறி தான். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்து சில ஆண்டுகளில் சினிமாவில் பெரும் புகழைப் பெற்ற ஒரு நடிகராக மாறினார். அந்த சமயத்தில் அவரது இல்லத்தில் ஒரு நிகழ்வு நடந்தது.
திடீரென ஒருநாள் வீட்டில் இருக்கும் போட்டோக்கள் பொருட்கள் என அனைத்தையும் உடைத்து எறிந்தார் ரஜினிகாந்த். ஆனால் பாலச்சந்தர் ஃபோட்டோவை மட்டும் ரஜினி உடைக்கவில்லை.
ரஜினிக்கு ஏதோ பிரச்சனை என்பதை அறிந்த அவரது மனைவி உடனே இயக்குனர் பாலச்சந்தருக்கு அழைப்பு விடுத்தார் ஏனெனில் ரஜினி பாலச்சந்தரை தவிர வேறு யார் பேச்சையும் அப்பொழுது கேட்கும் நிலையில் இல்லை. சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர் என்பதால் அவர் என்ன கூறினாலும் அதை ரஜினி எப்போதும் கேட்டுக் கொள்வதுண்டு.
இந்த நிலையில் ரஜினியை சந்தித்த பாலச்சந்தர் ”ஏன் இவ்வாறெல்லாம் செய்கிறாய்” என கேட்டார். அதற்கு ரஜினி ”எதற்காக சார் என்னை கதாநாயகனாக்கினீர்கள். என்னால் வெளியே வீதிகளுக்கு செல்ல முடியவில்லை ரோட்டு கடைகளில் சாப்பிட முடியவில்லை என்னுடைய சுதந்திரம் மொத்தமாக பறிபோய்விட்டது இப்படியான ஒரு வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை” என ரஜினி கூறியுள்ளார்.
பிரபலமாகும் பொழுது சில கஷ்டங்கள் வரத்தான் செய்யும் அதை எல்லாம் தாண்டி பிரபலமாவதால் கிடைப்பவற்றை நாம் அனுபவிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என பாலச்சந்தர் ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளார்.