Cinema History
பாலுமகேந்திராவின் வாழ்க்கையை மாற்றிய 2 நிகழ்வுகள்!.. நமக்கெல்லாம் இப்படி நடக்கலையே!.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் முக்கியமான திரை இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் இப்போதும் காவியங்களாக கொண்டாடப்படுகின்றன.
இயக்குனர் வெற்றிமாறன் மாதிரியான பல இயக்குனர்களை உருவாக்கி விட்ட பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவராகவும் நிறைய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும்போது அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள்தான் அவரை சினிமாவிற்கு கொண்டு வந்ததாக கூறுகிறார்.
அதில் முதல் விஷயம் அவருக்கு 5 வயதாக இருக்கும்போது நடந்தது. அந்த சமயத்தில் அவரது தந்தை அவருக்கு ஒரு கேமிராவை வாங்கி தந்திருந்தார். அந்த கேமிராவை வைத்து பல விதமான போட்டோக்களை எடுத்துள்ளார் பாலுமகேந்திரா.
அவற்றை பார்த்த அவரது உறவினர்கள் வெகுவாக பாராட்டவே தொடர்ந்து புகைப்படங்களை எடுக்க துவங்கியுள்ளார் பாலுமகேந்திரா. அதே போல பள்ளி படிக்கும் காலத்தில் ஒரு முறை பள்ளி மாணவர்களுடன் சுற்றுலா செல்லும்போது திரைப்படம் எடுக்கும் இடத்திற்கு சென்றுள்ளார் பாலு மகேந்திரா.
அங்கு இயக்குனர் மழை வரட்டும் என்று சொன்னதும் அந்த இடத்தில் மழை பெய்ய துவங்கியதை கண்டு பாலுமகேந்திராவுக்கு ஆச்சரியம். நாமும் இப்படி ஒரு இயக்குனராக வேண்டும் என அப்போதுதான அவர் முடிவு செய்தாராம். இந்த இரு நிகழ்வுகள்தான அவர் வாழ்க்கையை சினிமா நோக்கி கொண்டு வந்ததாக ஒரு பேட்டியில் கூறுகிறார் பாலுமகேந்திரா.