Tamil Cinema News
காதலியை ஏமாத்திதான் சினிமாவுக்கு வந்தேன்.. ஓப்பன் டாக் கொடுத்த பாசில் ஜோசப்.!
தற்சமயம் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் பாசில் ஜோசப் இருந்து வருகிறார். பாசில் ஜோசப்பை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்த அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களுக்கு வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்சமயம் தமிழ் சினிமாவிலும் பாசில் ஜோசப்புக்கு வாய்ப்புகள் வரத் துவங்கியிருக்கின்றன.
தமிழிலும் நிறைய பேர் அவரை பேட்டி எடுக்க துவங்கியிருக்கின்றனர். இப்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பாசில் ஜோசப் தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது நான் அப்பொழுது ஒரு பெண்ணை காதலித்து வந்தேன்.
நான் சினிமாவுக்கு செல்வது குறித்து அவருக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவரிடம் நான் கூறும் பொழுது சினிமாவில் ஒரு வேலை நான் தோல்வி அடைந்து விட்டால் எனது மேனேஜர் எனக்கு மீண்டும் அதே வேலையை தருவதாக கூறினார் என்று எனது காதலியிடம் கூறினேன்.
ஆனால் உண்மையில் அந்த மேனேஜர் அப்படியெல்லாம் கூறவில்லை அதேபோல சினிமாவில் நான் வளரும் காலங்களில் எனக்கு செலவுகளுக்கு எனது நண்பர்களும் எனது காதலியும் தான் பணம் கொடுத்து உதவினார்கள் என்று அந்த விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் பாசில் ஜோசப்.
