Latest News
5000 சம்பாதிச்சப்ப இருந்த சந்தோஷம் இப்ப இல்ல!.. வெங்கடேஷ் பட் கதையை கேட்டு கண்ணீர் விட்ட அரங்கம்!..
குக் வித் கோமாளி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல பிரபலங்களில் செஃப் வெங்கடேஷ் பட்டும் முக்கியமானவர். அதற்கு முன்பு வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறார் என்றாலும் கூட அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் மிகவும் சீரியஸாக இருப்பார் வெங்கடேஷ் பட்.
அதனால் அவரை பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனெனில் நடுவர் என்றாலே ரொம்ப ஸ்ட்ரிக்டாகதான் இருப்பார்கள். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் மிகவும் ஜாலியான ஒரு நபராக அவரை பார்க்க முடிந்தது.
அதிலிருந்து அவருக்கும் நிறைய ரசிகர்கள் உருவாக துவங்கினர். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் மகளிர் தினத்தை முன்னிட்டு வெங்கடேஷ் பட்டையை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து இருந்தனர். அப்பொழுது நிறைய கஷ்டப்பட்டு இப்படி ஆன ஒரு இடத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். இதன் மூலமாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த வெங்கடேஷ் பட் கூறும்பொழுது முதன்முதலில் ட்ரைனிங் வேலையில் சேரும் பொழுது ஐயாயிரம் ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தேன். இப்பொழுது எக்கச்சக்கமாக சம்பாதிக்கிறேன் ஆனால் அந்த 5000 ரூபாய் சம்பாதித்த போது இருந்த மகிழ்ச்சியில் கடுகளவு கூட இப்பொழுது எனக்கு இல்லை.
ஏனெனில் அப்பொழுது என்னுடைய தாய் என்னுடன் இருந்தார் ஆனால் நான் நல்ல நிலைக்கு வர துவங்கியப்போது என் தாய் என்னுடன் இல்லை எனது மகளுக்கே என் தாயின் பெயரை தான் வைத்திருக்கிறேன். ஆனாலும் கூட எனது அம்மாவின் இழப்பை என்னால் நிறைவு செய்யவே முடியாது. இப்போது இவ்வளவு ரூபாய் சம்பாதித்தாலும் கூட அந்த சந்தோஷம் இப்போது வரை கிடைக்கவில்லை என்று மன வருத்தத்துடன் கூறி இருக்கிறார் வெங்கடேஷ் பட்.