Tamil Cinema News
ஓ.டி.டில இந்த பிரச்சனையா? இப்படி ஆயிடுச்சே கூலி படத்தோட நிலை..
பெரிய திரைப்படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஓடிடி நிறுவனங்கள் நிறைய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். முக்கியமாக ஓடிடிக்கு வரும் காலத்தை முடிந்த அளவிற்கு தாமதம் செய்கின்றன.
இதற்கு காரணமாக திரையரங்குகள் தான் இருக்கின்றன. பெரிய திரைப்படங்களை அதிக நாளைக்கு ஓட வைத்து திரையரங்குகள் காசு பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இதனால் சீக்கிரம் ஓடிடிக்கு வந்துவிட்டால் மக்கள் திரையரங்கிற்கு வர மாட்டார்கள் என்பதாலேயே திரையரங்கு முதலாளிகள் பேசி படத்திற்கான ஓடிடி தேதியை மாற்றுகின்றனர். தக்லைஃப் திரைப்படத்திற்கும் இந்த மாதிரி நடந்தது.
இதற்கு முன்பு வரை படம் வெளியாகி மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு ஒரு திரைப்படம் ஓடிடிக்கு வந்துவிடும் என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது அது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் கூலி திரைப்படம் பெரிய வசூல் செய்யும் என்று பலரும் நினைத்து வருவதால் ஓடிடியை பொருத்தவரை படம் வெளியாக எட்டு வாரங்கள் அதாவது இரண்டு மாதங்கள் கழித்து தான் ஓடிடிக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆனால் இரண்டு மாதத்திற்கு தொடர்ந்து படம் அதிக வசூலை கொடுத்துக் கொண்டிருக்குமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அதே சமயம் ஓடிடியில் மட்டுமே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
