Latest News
தனிமையில் அத்துமீறினாரா தனுஷ்?.. ஜெயம் ரவி விவாகரத்துக்கு இதுதான் காரணமா?.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வரும் முக்கியமான விஷயமாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இவர்களுக்கு இடையேயான விவாகரத்து விஷயம் இருந்து வருகிறது.
இவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு இரு குழந்தைகளும் இருந்து வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் எழுந்து வருவதாகவும் இதனால் இவர்கள் விவாகரத்து பெறப்போவதாகவும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன.
கூறப்படும் காரணங்கள்:
தொடர்ந்து ஜெயம் ரவி தோல்வி படங்களாக நடித்ததால் அவரது மாமியாருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அதுவே தனது மனைவியுடன் பெரிதாக வெடித்ததாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.
![](https://cinepettai.com/wp-content/uploads/2024/06/jayam-ravi-wife.jpg)
மற்றொரு பக்கம் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது அந்த படத்தில் இருந்த ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அது அவரது மனைவிக்கு தெரிந்ததால் அவர் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் புதுமையான ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். ஜெயம் ரவிதான் முதன்முதலில் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இருக்கிறார். இன்னும் ஆர்த்தி தரப்பில் அது குறித்து பதில் இல்லை.
பத்திரிக்கையாளரின் கருத்து:
உண்மையில் தனுஷ்தான் இதற்கு காரணம் என்று கூறுகிறார் சபிதா ஜோசப். ஒரு இரவு விருந்துக்கு ஜெயம் ரவியும் ஆர்த்தியும் செல்லும் பொழுது அங்கு தனுஷை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் ஜெயம் ரவி.
![dhanush](https://cinepettai.com/wp-content/uploads/2023/11/dhanush.webp)
அதற்கு பிறகு ஆர்த்தியும் தனுஷும் தனிமையில் சந்தித்து கொண்டதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகுதான் ஜெயம் ரவி விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக கூறுகிறார் சபிதா ஜோசப்.
அந்த வகையில் ஏற்கனவே நிறைய நடிகைகளின் விவாகரத்திற்கு தனுஷ் காரணம் என்று பேச்சுக்கள் இருந்து வரும் நிலையில் இந்த விஷயத்திலும் தனுஷின் பெயர் அடிப்பட தொடங்கி இருக்கிறது.
![](https://cinepettai.com/wp-content/uploads/2023/10/logolow-4.png)