Cinema History
புள்ளி வச்சி 3 கதாநாயகிகளை தூக்கிய தமிழ் நடிகர்!.. ஓ இதுதான் காரணமா?..
sai pallavi anupama and Madonna sabastian : தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகர்களை காட்டிலும் ஒரு நடிகைகளுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியமான திரைப்படமாக இருக்கிறது. நடிகர்கள் கூட ஒரு திரைப்படத்தில் தோல்வியை கண்டால் மீண்டு எழுந்து அடுத்த படத்தில் வெற்றியை கொடுத்துவிடுவார்கள். ஆனால் கதாநாயகியை பொறுத்தவரை ஒருமுறை தோல்வி படத்தில் நடித்தால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினமாகும்.
உதாரணமாக நடிகை பூஜா ஹெக்தே தமிழில் முதன் முதலாக நடித்த முகமூடி படமும் சரி அதற்கு பிறகு நடித்த பீஸ்ட் படமும் சரி நல்ல வெற்றியை பெறவில்லை. இதனால் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பதே கடினமான விஷயமானது.
ஆனால் ஒரே திரைப்படம் மூன்று கதாநாயகிகளை தூக்கிவிட்ட சம்பவமும் தென்னிந்திய சினிமாவில் நடந்துள்ளது. நடிகை அனுபாமா பரமேஸ்வரன், மடோனோ சபாஸ்டியன் மற்றும் சாய் பல்லவி மூவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது பிரேமம் திரைப்படம்.
அந்த காலக்கட்டத்தில் நடிகர் தனுஷ் ஒரு விஷயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதாவது புதிதாக அறிமுகமாகி பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளுடன் படம் நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் போன்ற நடிகைகள் கூட அறிமுகமானதுமே தனுஷுடன் நடிப்பதை பார்க்க முடியும்.
இந்த நிலையில் பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுடன் நிவின் பாலிக்கு பிறகு சேர்ந்து நடித்தது தனுஷ்தான். ஆமாம் பா. பாண்டி படத்தில் மடோனாவுடனும், கொடி படத்தில் அனுபாமாவுடனும், மாரி 2 வில் சாய் பல்லவியுடனும் நடித்தார் தனுஷ்.