Connect with us

நான் நடிக்கும்போது மட்டும் குறுகுறுன்னு பாப்பாங்க… – அமீரை கலாய்த்த படக்குழுவினர்.!

Cinema History

நான் நடிக்கும்போது மட்டும் குறுகுறுன்னு பாப்பாங்க… – அமீரை கலாய்த்த படக்குழுவினர்.!

Social Media Bar

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் மிக பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கிய பருத்திவீரன், ராம் போன்ற திரைப்படங்கள் இன்னமும் தமிழ் சினிமாவில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.

இயக்குனர் என்பதை விடவும் நல்ல நடிகராக அமீரை பலரும் அறிவர். வட சென்னை படத்தில் ராஜன் என்கிற கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருப்பார் அமீர்.

அமீர் எப்போதும் படம் இயக்கும்போது ஆரம்ப நடிகர்களிடம் சில விஷயங்களை கூறுவார். உன்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரையும் முட்டள் என நினைத்துக்கொள் நீ மட்டும் அறிவாளி என நினைத்துக்கொள். அப்போதுதான் நடிக்க முடியும் என கூறுவார்.

ஆனால் வட சென்னை படத்தில் அவரே நடிக்கும்போதுதான் அது எவ்வளவு கஷ்டம் என தெரிந்துள்ளது. சுற்றி உள்ள மக்கள் மட்டுமின்றி அவருடன் பணிப்புரிந்த நபர்களும் கூட அமீரையே பார்த்துக்கொண்டுள்ளனர்.

இதனால் கடுப்பான அமீர் “மக்கள்தான் என்னையே பாக்குறாங்கனா, நீங்களும் ஏண்டா குறுகுறுன்னு பாக்குறீங்க. வேற எங்கயாவது பாருங்கடா” என கூறியுள்ளார். இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்துள்ளார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top