Connect with us

தயாரிப்பாளர், நயன்தாரா ரெண்டு பேருமே கை விட்டுட்டாங்களா!.. வாய்ப்பை இழந்த அருண்ராஜா காமராஜ்!..

nayanthara arunraja kamaraj

News

தயாரிப்பாளர், நயன்தாரா ரெண்டு பேருமே கை விட்டுட்டாங்களா!.. வாய்ப்பை இழந்த அருண்ராஜா காமராஜ்!..

Social Media Bar

Director Arunraja Kamaraj: தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எடுத்த பிறகும் கூட சில இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக தமிழில் கனா என்ற சிறப்பான திரைப்படத்தை எடுத்த இயக்குனர் அருண் ராஜா காமராஜ் ஒரு தயாரிப்பாளரின் சதியால் பல நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார்.

அவரது முதல் திரைப்படமான கனா திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்லா வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அருண் ராஜா காமராஜுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் அருண் ராஜா காமராஜுக்கு வாய்ப்பு கொடுத்தது.

நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாகவும் அதற்கு கதை எழுதுமாறு அன்புராஜா காமராஜிடம் கூறியிருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் ஒரு வருட காலமாகியும் கூட கார்த்தியை கண்ணில் கூட காட்டாமல் இருந்திருக்கின்றனர்.

அதற்குப் பிறகு கார்த்திக் மிகவும் பிசியாக இருக்கிறார் என்றும் எனவே தனுஷிற்கு ஒரு கதையை எழுதும்படியும் கூறி இருக்கின்றனர். அதற்கு கதை எழுதி வந்த நிலையில் தனுஷும் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவே அடுத்து நயன்தாராவிற்கு கதை எழுதுங்கள் என்று அவரை தொந்தரவு செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவிற்கு ஒரு ஆறு கதையை கூறியிருக்கிறார் இயக்குனர். அந்த ஆறு கதையுமே நன்றாக இருக்கிறது என்று நயன்தாரா கூறவும் அதில் மிகவும் குறைந்த பட்ஜெட்டாக இருக்க கூடிய ஒரு படத்தை படமாக்குவதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கிறது.

இதற்கு அன்னபூரணி படத்தின் தோல்வியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நயன்தாரா அதிகபட்ஜெட்டில் தன்னை வைத்து படம் எடுத்தால் நடிக்கிறேன் இல்லை என்றால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவே அருண் ராஜா காமராஜ் தற்சமயம் பிரின்ஸ்பெக்டர் நிறுவனத்திடம் இருந்து விலகி இருக்கிறார் வேறு ஏதோ ஒரு தயார்ப்பாளரை பிடித்து அதன் மூலமாக படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

Articles

parle g
madampatty rangaraj
To Top