Connect with us

பெரிய ஹீரோ கிடைச்சிட்டான்னு அவன சாவடிக்க கூடாது!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றாரு போல!.. விஜய் பட இயக்குனர் ஓப்பன் டாக்!.

lokesh kanagaraj 2

Cinema History

பெரிய ஹீரோ கிடைச்சிட்டான்னு அவன சாவடிக்க கூடாது!.. லோகேஷ் கனகராஜைதான் சொல்றாரு போல!.. விஜய் பட இயக்குனர் ஓப்பன் டாக்!.

Social Media Bar

Lokesh kanagaraj:விஜய்யின் சினிமா வரலாற்றை எடுத்துக் கொண்டால் அதில் அவருக்கு மைல் கல்லாக சில திரைப்படங்கள் அமைந்திருக்கும் உதாரணத்திற்கு விஜய்யின் வெற்றியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு எப்படி பெரும் பங்கு இருக்கிறதோ அதேபோல இயக்குனர் எழிலுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.

இயக்குனர் எழில் இயக்கிய துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்யின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான ஒரு திரைப்படமாகும் அந்த திரைப்படம் தந்த வெற்றி எவ்வளவு பெரிது என்றால் இப்போது வரை அந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் போட்டால் அப்போது இருந்த சினிமா ரசிகர்கள் அதை பார்ப்பார்கள்.

லோகேஷ் கனகராஜ் திரைப்படமாகவே இருந்தாலும் ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் அந்த திரைப்படத்தை பார்க்க முடியாது. ஆனால் விஜய் முன்பு கொடுத்த நிறைய வெற்றி படங்கள் பல தடவை பார்க்கும் வண்ணம் அமைந்த திரைப்படங்கள் ஆகும்.

இயக்குனர் எழில் விஜய்யுடன் பணிபுரிந்த நிகழ்வுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருந்த பொழுது அந்த படத்தில் காமெடி, சென்டிமென்ட், காதல் என்று பல தரப்பட்ட விஷயங்கள் இருந்ததை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படம் என்பது வெறும் கதாநாயகனை மட்டும் வைத்து மட்டும் உருவாவது கிடையாது. அதில் உள்ள அனைவருமே அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கின்றனர். துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தைப் பொறுத்தவரை படம் முழுக்க நான் விஜய்யை காட்டிக் கொண்டிருக்வில்லை.

lokesh-kanagaraj-pic
lokesh-kanagaraj-pic

விஜய் இல்லாமல் மற்ற நடிகர்கள் அவர்களது வாழ்க்கை முறை என்று காமெடி நடிகர்களுக்கு கூட தனியாக காட்சிகள் வைத்திருப்பேன். ஒரு பெரிய ஹீரோ கிடைத்துவிட்டார் என்பதற்காக படம் முழுக்க அவரை வைத்து சாவடிக்க கூடாது தேவைப்படும் இடத்தில் மட்டும்தான் பெரிய கதாநாயகனாக இருந்தாலும் இருக்க வேண்டும் என்று எழில் கூறியிருந்தார்.

தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் படம் முழுக்க அந்த கதாநாயகன் இருப்பது போல் தான் இருக்கின்றன எனவே அதை கூறும் வகையில் தான் இப்படி பேசி இருக்கிறார் எழில் என்று ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

To Top