Connect with us

என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

Cinema History

என்னங்க ஒரே இடத்துலையே உருட்டிக்கிட்டு இருக்கீங்க!.. தேவாவின் இசையால் கடுப்பான கே.எஸ் ரவிக்குமார்…

Social Media Bar

தேனிசை தென்றல் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் தேவா. நாட்டுபுற இசையை வெள்ளித்திரையில் ஒலிக்க செய்ததில் தேவாவிற்கு முக்கிய பங்குண்டு. நாட்டுபுற இசை மட்டுமின்றி பல வித இசைகளையும் கையாள கூடியவர் தேவா.

ஆனால் கானா பாடல்களுக்குதான் இவர் பிரபலம். இதனால் இவர் இசையமைக்கும் படங்களில் ஒரு கானா பாடலையாவது வைத்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் இயக்குனர். இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை பெற்றார் தேவா.

இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார்தான் இயக்கினார். படத்தில் வழக்கம் போல ஒரு கானா பாடல் வேண்டும் என்பதற்காக வேல வேல என்னும் ஒரு பாடல் அமைந்திருந்தது.

 அதற்கு பிறகு படத்தில் ஒரு மெலோடி பாடல் அமைய வேண்டும் என நினைத்தார் கே.எஸ் ரவிக்குமார். நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் நிறைய மெலோடி பாடல்களை தேவா கொடுத்துள்ளார். எனவே ஒரு நல்ல லவ் பாடலை அவரிடம் வாங்கிவிடலாம் என முடிவு செய்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் தேவா இசையமைத்த இசை கே.எஸ் ரவிக்குமாருக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. ஒரே இசையே திரும்ப திரும்ப வருகிறதே சார் என கேட்டுள்ளார் கே.எஸ் ரவிக்குமார். உடனே தேவா நாளைக்கு பாடல் வரிகளை எழுதி வருகிறேன், அதன் பிறகு பாடல் எப்படி இருக்கிறது என பாருங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அதன் பிறகு மறுநாள் வந்து காதலா காதலா என்கிற அந்த பாடலை பாடியுள்ளார். பாட்டை கேட்ட உடனேயே கே.எஸ் ரவிக்குமாருக்கு பிடித்துவிட்டது. இதை ஒரு மேடை நிகழ்ச்சியில் கே.எஸ் ரவிக்குமார் பகிர்ந்திருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top