Latest News
சாக்கடையில் ஊரும் சங்கி… பிரபல எழுத்தாளருக்கு மூடர்கூடம் நவீன் பதில் ‘அடி’
மஞ்சுமேல் பாய்ஸ் படம் தமிழ்நாட்டில் ஹிட் அடிக்க அதை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் ஒரே பேச்சு. இந்த படம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறியது சர்ச்சை ஆக, அதற்கு பலரும் பத்தி கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய சர்ச்சை கருத்துக்கு இயக்குனர் நவீன் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்ட்டு வருகிறது.
மலையாளத் திரைப்படமான ‘மஞ்சுமேல் பாய்ஸ்’ தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, தமிழ் சினிமாவின் தற்போதைய பேசுப்பொருளாகவும் மாறியிருக்கிறது. நடிகர்கள் கமல்ஹாசன், விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்கள் அப்படத்தை பாராட்டுவதோடு, அப்படக்குழுவினரையும் நேரில் வழவைத்து பாராட்டி கெளரவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் குடிகார பொறுக்கிகளை ஜாலியனாவர்கள் போன்று காட்டியிருப்பதாகவும், மஞ்சும்மல் பாய்ஸ் தனக்கு எரிச்சலூட்டும் படமாக உள்ளது எனவும் எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்திருந்தார். இப்படத்தினை கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள் என்றெல்லாம் படத்தை விமர்சித்தும், மலையாள மொழி மக்களை விமர்சித்தும் பேசியிருந்தார்.
இதற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் வலுவாக கிளம்பி வருகிறது.
இதற்கு மூடர்கூடம் திரைப்பட பிரபல இயக்குனர் நவீன் தற்கு பதில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது x தளத்தில் வெளியிட்ட பதிவில்,‘தமிழ் பொறுக்கிஸ்’ என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி), ‘மலையாளப் பொறுக்கிகள்’ என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே. தமிழர்கள் – கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும் அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர் என்று கூறி இருக்கிறார்.
நவீனின் இந்த கருத்து ஏற்றுகொள்ள கூடியதாக இருப்பதாக, பெரும் ஆதரவு கிளம்பி வருகிறது.