Connect with us

படம் நல்லா இல்லைனா காரி துப்பிருவாங்க சார்! –  தனுஷ் பசங்க குறித்து கூறிய செல்வராகவன்!

selvaraghavan

Cinema History

படம் நல்லா இல்லைனா காரி துப்பிருவாங்க சார்! –  தனுஷ் பசங்க குறித்து கூறிய செல்வராகவன்!

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில்  பல படங்கள்  ஹிட் கொடுத்த இயக்குனர்களில்  இயக்குனர் செல்வராகவனும் ஒருவர்.  செல்வராகவன் இயக்கிய  புதுப்பேட்டை, இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற  திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் பிரபலமாக உள்ளன.

இறுதியாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் செல்வராகவன்.  இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனாலும் தற்சமயம் செல்வராகவன் படம் இயக்குவதை காட்டிலும் படத்தில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

ஏறகனவே விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்சமயம் பகாசுரன் திரைப்படத்திலும் கூட நடித்திருந்தார். தற்சமயம் ஒரு பேட்டியில் அவர் பேசி கொண்டிருக்கும்போது தனுஷின் மகன்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது உங்களது திரைப்படங்கள் குறித்து தனுஷ் மகன்கள் என்ன கூறுவார்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு செல்வராகவன் கூறும்போது “காரி துப்பிடுவாங்க சார். நமக்காக நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டாங்க. என்ன பெரியப்பா உன் படம் நல்லாவே இல்லன்னு சொல்லிடுவாங்க”. என கூறியுள்ளார் செல்வராகவன்.

அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2, மன்னவன் வந்தானடி போன்ற திரைப்படங்களை இயக்க உள்ளார் செல்வராகவன்.

To Top