Tamil Cinema News
நிஜ மனிதரை தப்பா பயன்படுத்தி இருக்காங்க.. கேம் சேஞ்சர் ட்ரெய்லரால் ஷங்கருக்கு வந்த பிரச்சனை..!
தமிழ் சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்குனர் திரைப்படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
ஏனெனில் அந்த அளவிற்கு இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை.
அதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கருக்கு வரவேற்பு என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்சமயம் அவருடைய இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சரண் நடித்திருக்கிறார். ராம்சரண் ஐ.ஏ.எஸ் ஆபீஸர் கதாபாத்திரத்தில் இதில் நடித்திருக்கிறார். நடிகர் எஸ் ஜே சூர்யா தான் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தின் பெயர் குறித்து நிறைய சர்ச்சைகள் தற்சமயம் உருவாகி வருகின்றன . இவரது பெயர் உப்பிலி என்பதாக இருக்கிறது. 1936 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை உப்பிலி ராஜா என்கிற மகாராஜா ஆண்டு வந்தார்.
அப்பொழுது அவர் நிறைய சமூகத்தில் சீர்திருத்தங்களை மெட்ராஸ் மாகாணத்தில் செய்ததாக கூறப்படுகிறது அப்படிப்பட்டவரின் பெயரை எப்படி வில்லனுக்கு வைக்கலாம் என இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.