அவசரப்பட்டுட்டியே குமாரு!.. தயாரிப்பாளர் சூழ்ச்சி தெரியாமல் சிக்கிய பா.ரஞ்சித்!..

Director Pa Ranjith: தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா.ரஞ்சித். அவர் இயக்கிய முதல் படமான அட்டக்கத்தி திரைப்படத்தில் துவங்கி அனைத்து திரைப்படங்களுமே வரவேற்பை பெற்ற திரைப்படங்களாகவே இருக்கின்றன.

அவர் இயக்கிய சார்ப்பாட்டா பரம்பரை திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது. கமர்ஷியல் கதைகளாக இருந்தாலும் அதன் வழியே சமூக அரசியலை பேசியிருப்பார் இயக்குனர் பா. ரஞ்சித்.

pa-ranjith
pa-ranjith
Social Media Bar

இந்த நிலையில் தற்சமயம் பா.ரஞ்சித் தங்கலான் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சியான் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எஃப் பகுதியில் உள்ள தங்கத்தை எடுப்பதற்காக அங்குள்ள பழங்குடியினரை விரட்ட நினைக்க தங்கள் நிலத்திற்காக அவர்கள் செய்யும் போராட்டங்களே கதை என கூறப்படுகிறது.

செலவில் வந்த பிரச்சனை:

இந்த நிலையில் இந்த படத்திற்கு தயாரிப்பு செலவு என்பது அதிகமாக இருக்கும். ஆனால் ஃபர்ஸ்ட் காபி முறையில்தான் பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அதாவது ஆரம்பத்திலேயே தயாரிப்பாளர் ஒரு தொகையை இயக்குனருக்கு கொடுத்து விடுவார். அந்த தொகையில் எவ்வளவு குறைத்து படத்தை எடுக்க முடியுமோ அப்படி எடுத்துவிட்டு மீத பணத்தை இயக்குனர் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் பா.ரஞ்சித் ஆரம்பத்தில் படத்திற்கு குறைவான தொகையை தயாரிப்புக்காக கேட்டிருக்கிறார். படத்திற்கு அதிக செலவாகும் என்று தெரிந்தே தயாரிப்பாளரும் குறைவான தொகையை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

thangalaan1
thangalaan

இந்த நிலையில் தற்சமயம் படத்திற்கான செலவுகள் எதிர்பார்த்ததை விட அதிகரித்ததால் தனது சொந்த பணத்தை போட்டு படத்தை இயக்கியிருக்கிறாராம் பா.ரஞ்சித். மொத்தமாக அவர் 20 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில் தயாரிப்பாளரிடம் அந்த தொகையை கொடுத்துள்ளாராம் பா.ரஞ்சித்.

இதனையடுத்து படப்பிடிப்பில் பிரச்சனையாகி பாதியிலேயே நிற்கிறதாம் தங்கலான் திரைப்படம்.