Latest News
தங்கலான் படம் எப்படி இருக்கு!.. வெளிவந்த முதல் விமர்சனம்!..
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் என்றால் தங்கலான். நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரும்.
நடிகர் விக்ரமுடன் மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பூர்வ குடி தமிழர்களின் வரலாற்று பேசும் வகையில் உண்மை சம்பவத்தை தழுவி இந்த படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் முதல் விமர்சனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரமின் நடிப்பில் தங்கலான் திரைப்படம்
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான் இந்த திரைப்படம் தமிழ், மலையாள, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பா, ரஞ்சித்தின் படம் எப்பொழுதும் ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு பெரும் அந்த வகையில் நடிகர் விக்ரம் நடித்து வரும் இந்தத் திரைப்படம் அனைவரின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் 30 கிலோ எடை வரை குறைத்து மிகவும் கடுமையாக உழைத்து உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் விக்ரமிற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன்ஸ் மற்றும் நீலம் பட தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் 2000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
படத்தைக் குறித்து நடிகர் விக்ரம் கூறியது
தற்பொழுது படம் வெளியாக குறைந்த நாட்கள் உள்ளதால் படத்திற்கான ப்ரமோஷன் பணியில் படக்குழு இறங்கி இருக்கிறது. மேலும் உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் நான்கு பாகங்களாக எடுக்கக்கூட வாய்ப்பிருக்கிறது என நடிகர் விக்ரம் தெரிவித்து இருக்கிறார். இது மேலும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அவர் கூறும் பொழுது இந்த படத்தில் கதைக்களம் நான்கு பாகங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.