Connect with us

தமிழில் அறிமுகமாக இருந்த தீபிகா படுகோனே!.. தட்டி தூக்கிய ஷாருக்கான்!.. தவறவிட்ட சூர்யா!..

deepika padukone surya

Cinema History

தமிழில் அறிமுகமாக இருந்த தீபிகா படுகோனே!.. தட்டி தூக்கிய ஷாருக்கான்!.. தவறவிட்ட சூர்யா!..

Social Media Bar

Deepika padukone: பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தீபிகா படுகோனே. ஹாலிவுட் வரை சென்று நடித்துவிட்டு வந்துள்ளார். தமிழில் நேரடியாக அவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததில்லை. சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தாலும் கூட அந்த திரைப்படம் நேரடியாக தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம் கிடையாது.

ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தின் மூலமாகத்தான் தீபிகா படுகோன் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். நடிகர் ஷாருக்கான் அவரை அறிமுகப்படுத்தினார். பொதுவாகவே ஷாருக்கான் அறிமுகப்படுத்தும் நடிகைகள் எல்லாம் பாலிவுட்டில் பெரும் உயரத்தை தொடுவது உண்டு.

இந்த நிலையில் அதே சமயத்தில்தான் இயக்குனர் கௌதம் மேனன் வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கான கதையை எழுதி வந்தார். அப்பொழுது மாடலிங் துறையில் இருந்த தீபிகா படுகோனே தன்னுடைய திரைப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் கௌதம் மேனன்.

இது குறித்து அவர் ஏற்கனவே தீபிகா படுகோனிடம் பேசியும் வைத்திருந்தார் ஆனால் படப்பிடிப்பு துவங்கும் பொழுதுதான் அவருக்கு தெரிந்தது அதற்கு முன்பே தீபிகா படுகோனே ஓம் சாந்தி ஓம் திரைப்படத்தில் கமிட்டாகி விட்டார் என்று. ஒரு வேளை அப்பொழுது தீபிகா படுகோன் இந்த திரைப்படத்தில் கமிட்டாகவில்லை என்றால் வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தான் அவர் அறிமுகமாகி இருப்பார்.

இதனால் கௌதம் மேனன் பிறகு சமீரா ரெட்டியை அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். சமீரா ரெட்டிக்கு உண்மையில் வாரணமாயிரம் திரைப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. ஒருவேளை தீபிகா படுகோனே நடித்தாலும் அவருக்கு முக்கியமான படமாக தான் இது இருந்திருக்கும் ஆனால் ஹாலிவுட் வரை செல்வதற்கான இந்த செல்வாக்கு அவருக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே..

Articles

parle g
madampatty rangaraj
To Top