Connect with us

சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!.. சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறிடும் போல!..

gaundamani

News

சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுக்கும் கவுண்டமணி!.. சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறிடும் போல!..

Social Media Bar

சமீப காலமாக 1980 களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் எல்லாம் திடீரென சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது

ஏனெனில் ஒரு காலத்தில் விஜய் அஜித்தை விட பெரிய கதாநாயகனாக இருந்தவர்கள் திரும்பவும் தமிழ் சினிமாவில் களமிறங்குகின்றனர் எனும் பொழுது அது எதிர்பார்ப்பை துண்டுவதாக இருக்கிறது. ஆனால் ரீ எண்ட்ரி என்று என்பது எல்லா நடிகர்களுக்கும் நல்லவிதமாக அமைந்து விடுவதில்லை.

ரீ எண்ட்ரி ஆகும் பிரபலங்கள்:

அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதைகளே காரணமாக இருக்கின்றன உதாரணத்திற்கு அரவிந்த்சாமி தனி ஒருவன் திரைப்படத்தின் மூலமாகவே ரீ எண்ட்ரிஆனார். அந்த திரைப்படத்தின் கதைகளம் சிறப்பாக இருந்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

Goundar-2
Goundar-2

ஒருவேளை அரவிந்த்சாமி மோசமான ஒரு கதையை தேர்ந்தெடுத்து இருந்தால் அவருக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது. அந்த வகையில்தான் நடிகர் ராமராஜன் நடித்த திரைப்படம் வரவேற்பு பெறாமல் போனதால் அவர் ரீ என்ட்ரி ஆனபிறகு கூட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

கவுண்டமணி ரீ எண்ட்ரி:

இதற்கு நடுவே நடிகர் மோகன் தற்சமயம் கோட் திரைப்படத்தில் வில்லனாக களம் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கை கொடுக்குமா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும் இந்த நிலையில் கவுண்டமணியும் ஒத்த ஓட்டு முத்தையா என்கிற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் அறிமுகமாக இருக்கிறார்.

பொதுவாகவே கவுண்டமணிக்கு அரசியல் சார்ந்த காமெடிகள் என்பது சிறப்பாக வரும். திரைப்படங்களில் காமெடியனாக நடித்த காலகட்டங்களிலேயே உலக அரசியல் வரை அனைத்தையும் பேசியவர் நடிகர் கவுண்டமணி.

பின் நாட்களில் அவர் நடித்த 49 ஓ என்னும் திரைப்படம் கூட அரசியல் சார்ந்த திரைப்படமாக தன் இருந்து வந்தது. இந்த திரைப்படம் கண்டிப்பாக அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற சிவகார்த்திகேயன் ஆசையும் கவுண்டமணி ரீ எண்ட்ரி மூலமாக சாத்தியப்படும் என கூறப்படுகிறது.

To Top